சின்ன ஆசையுள்ளுக்குள் எண்ணமாய்ச் சிறுகணத்தில் துளிர் விட்டதும் வேகமான அவ்விழைவு விளைச்செயலிலும் மண்ணள்ளிப் போடுகிறது சித்துகளில் சிறந்து விளங்கும் சித்தனொருவனின் மந்திரங்களிலொன்றை கைப்பற்றும் எண்ணமும் அவ்வாறேயெனக்கு முளைவிட்டது நயந்தும் பயந்தும் நஞ்சுணவிட்டும் எதுவும் பயனற்றுப்போயின மோதிரமாய் மூன்று சுற்றுச் சுற்றியிருக்கும் பாம்புக்கேயித்தனை பரிதவிப்புகளென்பதை பதறாமலுணர்ந்தானோ அச்சித்தன் சிறு கயிறுமொரு நீறும் அணியாதவனின் அவ்வுயிர் மோதிரம் எனக்குத் தனித்துறுத்தியதில் வியப்பேதுமில்லை பெருமுயற்சிகளுக்குப் பின்னர் அரைமனதாயதை கைவிட்டேன் கைவிட்ட பின்பாவது கிட்டுமென்ற நப்பாசையாய் உறுத்தியது தொலி மினுக்கங்கொண்ட நாகமோதிரம் கனவுக்குள் நஞ்சைப் பாய்ச்சின மோதிர விரலிலிருந்து பாம்பு டிஸ்கோ இரப்பர் பேண்டாய் விரிந்தது வேளை பார்த்தெட்டி கட்டைவிரலைத் தவ்வி கடித்ததும் அதனிரு கண்களிருந்தும் ஒருநிறயிரு கடுவன் பூனைகள் தவ்வின கைக்குழந்தையுடன் வந்த பெண்ணின் சீலையையவை கவ்வின ஒருகையால் குழந்தையையும் மறுகையால் சீலையையும் பாதுகாத்தாள் ஓடியுதவி செய்யும் முன்னே அக்கனவு தெளிநீரை மறைக்கும் நுரையானது மறுநாள் அச்சித்தன் வாய் திறவாமலே என்னிடமொரு வாக்கு கேட்டான் கைப்பற்றும் தீயயெண்ணம் கைவிடுவதாய் ஒப்புக்குக் கையடித்துச் சொல்லவும் சித்தன் உள்ளங்கைத் தீண்டலில் வௌமெடுத்த நாகம் விரலைத் தீண்டியது நஞ்சு மணிக்கட்டைத் தாண்டு முன் இரு கடுவன் பூனைகளும் சதையைப் பிறாண்டிப் பிறாண்டி பதம் பார்க்கத் துவங்கின மேனியெங்கும் பொங்கும் குருதியைத் துடைத்துக் கொண்டே விரைவிலிக் கனவும் கலையுமென உறை குருதியாய் பன்னெடுங் காலமாகத் தளராது காத்தோ காத்திருக்கிறேன்.
சின்னத் தொடையிடுக்கில் கை வைத்துறங்குமச் சிறுவன் வளர்ந்ததும் பிறவிக்குணத்தை மட்டை வைத்துக் கட்டமுடியாமல் தனக்கொரு பெண்ணைத் தேடிக்கொள்கிறான் தலையணையைக் கட்டிப் பிடித்தபடியுறங்குமச் சிறுமியின் வளையாத அப்பண்புக்காய் பெருந்தொகையீடாகத் தந்தொரு ஆணை பதிலீடாக விலைக்கு வாங்கித்தருகிறார் தந்தை தனித்திருக்கும் நாய் குரைக்குமோ கடிக்குமோவென இரு நாய்களையும் இணைக்குமச் செயலால் அவ்விரண்டையும் அதுகளுக்குள்ளே செய்கின்றன விதிவிலக்கான விலகலில் பிறன்மனையும் நெடுநாட்கள் நீடிக்காத காரணத்தால் தடுப்பூசியற்ற தயக்கங்களை உடைக்குமக் கணத்தில் வெறிகளும் கடிகளும் வினயமாக்கப்படுகின்றன விளையாட்டாய் அடுக்குமருமை உடைக்கும் நாய்க்கு தெரியாததால் அடைக்கண்ணவதியில் முடக்குமிருவரையும் ஏழிழைப்போட்டு ஏங்கி வாங்கிய பேறுகாலத்திலவள் பெற்றயிருபால் குழந்தைகளும் வளர்பிராயக் கிளர் முறையில் வழிவழியாய் பெற்றுவந்த பழக்கங்களைச் செய்கின்றனர் மகளையும் மகனையும் மருவி நோக்கும் பெற்றோரால் பெறுமதிப்புக் கூடியும் உறுமதிப்புக் குறையாத சந்தைகள்.
சின்னமேதுமற்று தோன்றிய கணமிருந்தே இலங்குகின்ற கவிதையென்பது உப்புத்தாளால் முகந்துடைப்பது நகைத்தபடியே நரம்பையறுப்பது கற்பனையுறுப்பில் களி கொள்வது கூரூசியை கண்ணிலிறக்குவது உறவுகள் முகஞ்சுழிப்பது கொதியிரும்பாய் தனித்திருப்பது கவிதையென்பது நறுக்கப்பட்ட விரல்கள் குவிந்தெழும் வெடிப்புகைகள் உடற்வேட்கையின் உயிர்த்துடிப்பு இமைகளின் அதிவுயர் பயன்பாடு வெக்கை தணிக்கும் காற்று நெருப்பை வாங்கும் காரணி பிய்ந்த உள்ளீட்டுச் சொற்கள் மேலும் கவிதையென்பது படர்தாமரையின் வடிவங்கள் அரிக்கப்பட்ட கரைகள் புண் பத்திய மேலுகள் புலப்படாத் துரோகங்கள் நிறை போதையின் வாநீர் வறுகடலையின் மணம் பிரண்டையுப்பின் துவர்ப்பு அப்புறம் கவிதையென்பது தெரிந்த பெண்ணின் புன்னகை தீட்டி மறையும் சொற்சித்திரம் கனவுகளின் கடுஞ் சஞ்சரிப்பு தனிப்பட்ட முறையில் சீரழிவது தன்னாலேயே நெறிபடுவது பிறரறிவரென எவருமேயெண்ணுவது மேலும் கவிதையென்பது அளவு கடந்த மதிமயக்கங்கள் அதனார்வலர்களை தூண்டும் கதிகள் புரிபடா தன்மையில் புலன்கள் நெறிபடுவது எக்காலத்திலும் குறுங்குழு மண்ணள்ளிப் போடுவது தெளிவற்ற வழியிலே நிலைக்கச் செய்வது வழியுற்றும் அதிலேயே திளைக்கச் செய்வது மென்மேலும் கவிதையென்பது சலிப்பு மேலிடுமிரவுகள் குதிகாலின் உயர்வழுத்தம் செறிவூட்டிய உயிரிருப்பு நெஞ்சுக்குள் சுடும் பொங்கச்சோறு வறுபடும் உளுந்தின் மணம் வெட்டவெளி மின்னல் வேவு பார்க்கும் சன்னல் அய்யா கவிதையென்பது வரவழைத்த வெஞ்சினம் தெளிவற்றவுணர்வின் அலைவு மறைந்திருக்கும் புதை மணல் கொதிப்பேறும் சிறு மூளை மரிப்பதற்கெனவே பிறக்குமுயிரி இடையிடையே வாழும் தன்மை நாட்பட்டு படருமுள்ளாடைத் தடம் மேலும் கவிதையென்பது இனங்கெட்ட கழுதைக்கில்லா ஏனம் குணங்கெட்ட மாட்டுக்கற்ற கூளம் வெங்கம்பயலுக்கு வாய்த்த யோனி உத்தம பரத்தையின் உற்சவம் சொற்ப காலங்களின் அற்பம் பட்டதனால் பதறும் மனம் இட்டதனால் இடறுரும் கரம் மென்மேலும் கவிதையென்பது இன்னதுதானென்று உறுதியாக ஒரு கூதியானுக்குங் தெரியாது.