சனிக்கிழமைக்கு அடுத்த ஒருநாள்

ஸ்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில்: ஜே. எஸ். பெர்ன்ஸ்டைன்
தமிழில்: இரா. சுகந்தன்

பகிரு

மொழியாக்கச் சிறுகதை

இரண்டு நுழைமாடங்களையும் ஒன்பது படுக்கை அறைகளையும் உடைய ஒரு மிகப்பெரிய வீட்டில் வசித்து வந்த, வாழ்க்கையில் வெறுப்புற்ற ஒரு விதவையான ரெபெக்கா, தெருவிலிருந்து கல் எறியப்பட்டதைப் போன்று திரைச்சீலைகள் கிழிக்கப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தபோது, ஜூலையில் தொடங்கியது தொந்தரவு.

தனது படுக்கையறையில் இந்த முதல் கண்டுபிடித்தலை செய்யவும், தனது கணவன் இறந்தகாலம் தொட்டு அவளது வேலைக்காரியாகவும் நம்பிக்கைக்குரியவளாகவும் இருக்கும் அர்ஹேனீதாவிடம் இதனைக் குறித்துப் பேசியாக வேண்டும் என்றும் நினைத்தாள்.

பின்னர்ப் பொருட்களை நகர்த்தி வைத்துக்கொண்டிருக்கும்போது (ஒரு நீண்டகாலமாகவே ரெபெக்கா பொருட்களை இடம் மாற்றுவது அல்லது வேறு எதையும் செய்திருக்கவில்லை), படுக்கையறையில் உள்ள திரைச்சீலைகள் மட்டுமல்ல வீட்டில் இருந்த மற்ற அனைத்து திரைச்சீலைகளும் கூடக் கிழிக்கப் பட்டிருப்பதைக் கவனித்தாள்.

விதவையானவள் அறிவு செறிந்த உணர்வுடைய அதிகாரம் செலுத்துதலைக் கொண்டிருந்தாள், சுதந்திரப்போரில் இராயலிஸ்டுகளின் பக்கம் சேர்ந்து போரிட்டவரும் பிற்பாடு மூன்றாம் சார்லஸ் சான் இல்திஃ போன் சோவில் கட்டிய மாளிகையைச் சென்று காணும் ஒற்றை நோக்கத்துடன் ஸ்பெயினிற்கு எளிதில் செய்ய இயலாத பயணத்தை மேற்கொண்டவருமான ஒரு கிரியோலான, தந்தைவழிப் பூட்டனாரிடமிருந்து மரபுவழியாகப் பெறப்பட்டதாக இருக்கலாம் ஒருவேளை அது.

ஆகையால் மற்ற திரைச்சீலைகளின் நிலையை அவள் கண்டுபிடித்தபோது, அர்ஹேனீதாவிடம் அதைப் பற்றிப் பேசிப் பயனில்லை என்று நினைத்தாள் என்றாலும், இன்னும் சரியாகச்சொல்வதென்றால், சின்னஞ்சிறு வெல்வெட் மலர்களுடன் இருந்த அவளது வைக்கோல் தொப்பியை அணிந்துகொண்டு இந்தத் தாக்குதலைப் பற்றிய ஒரு தகவலைத் தெரிவிப்பதற்காக நகர மண்டபத்திற்குச் சென்றாள்.

ஆனால் அவள் அங்குச் சென்று அடைந்தபோது, மேற்சட்டையற்று, முடியடர்ந்து அவளுக்கு விலங்கியல்புடையதாகத் தோன்றிய ஒரு திண்மையுடன் இருந்த, மேயரையேக் கண்டாள், நகர மண்டபத்தின் திரைச்சீலைகளை, தன்னுடையதைப் போன்றே கிழிக்கப்பட்டிருந்தவற்றைச் செப்பனிட்டுக் கொண்டு பரபரப்பாக இருந்தவரை.

அழுக்காகவும் தாறுமாறான துப்புரவற்ற நிலையிலும் இருந்த அலுவலகத்திற்குள் பாய்ந்து நுழைந்தாள் ரெபெக்கா, அப்புறம் அவள் கண்ட முதல் விஷயம் மேசையின் மேலிருந்த இறந்த பறவைகளின் ஒரு குவியலாகும்.

ஆனால் அவள் ஒருங்கு குலைந்திருந்தாள், வெப்பத்தால் பகுதியளவிலும், அவளது திரைச்சீலைகளின் கேடுபாடு அவளுள் விளைவித்திருந்த உளக்கொதிப்பினால் பகுதியளவிலும், ஆகையால் மேசை மீதிருந்த இறந்த பறவைகளின் கேள்விப்பட்டிராத கண்காட்சியைக் கண்டு மனம் பதறுவதற்கு அவளுக்கு நேரம் இருக்கவில்லை. படிக்கட்டின் உச்சியில், ஜன்னலின் உலோகக் கம்பியிழைகளைத் திரைச்சீலைத் துணியின் ஒரு சுருளினாலும் ஒரு திருப்புளியினாலும் செப்பனிட்டுக்கொண்டிருந்த, அதிகாரமிக்கவரின் சீரழிவின் அத்தாட்சியினால் அவள் மதிப்புக் குலைந்துவிடவும் இல்லை.

தனது சொந்த திரைச்சீலைகளால் எள்ளி நகையாடப்பட்ட, தன்னை அல்லாத வேறு எந்தவொரு மேன்மை மிக்கவரையும் பற்றி அவள் தற்போது எண்ணிக்கொண்டிருக்க வில்லை, அப்புறம் அவளது முழு ஈடுபாடானது தனது வீட்டின் ஜன்னல்களையும் நகர மண்டபத்திலிருந்த ஜன்னல்களையும் இணைத்துப் புரிந்துகொள்வதிலிருந்து அவளைத் தடுத்தது.

கதவிற்கு உள்ளாக இரண்டு அடிகள் எடுத்து வைத்து ஒரு கூரிய மதிப்பார்வத்துடன் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு, அப்புறம் தனது கைக்குடையின் நீண்ட அலங்கரிக்கப்பட்ட பிடியில் சாய்ந்தவாறு, கூறினாள்:

“எனக்கு ஒரு புகார் அளிக்கவேண்டும்.”

படிக்கட்டின் உச்சியிலிருந்து, மேயர், வெப்பத்தினால் கன்றிச் சிவந்திருந்த தனது தலையைத் திருப்பினார்.

தனது அலுவலகத்தில் விதவையின் தானாக வலிந்து உண்டாக்கிய இருப்பிற்கு எதிராக மேயர் உணர்ச்சி எதையும் காட்டவில்லை.

மனச்சோர்வு தரும் அசட்டையுடன் பாழாக்கபட்டிருந்த திரைச்சீலையினை அவர் பிரித்துவிடுவதைத் தொடர்ந்தார், அப்புறம் மேலிருந்தே கேட்டார்:

“என்ன தொந்தரவு?”

“பக்கத்திலிருக்கும் பையன்கள் எனது திரைச் சீலைகளை முறித்துப் போட்டனர்.”

அவள் மேல் மேயர் வேறொரு நோட்டமிட்டார். அவளைக் கவனமாக ஆய்வுசெய்தார், நயநாகரீகமான சின்னஞ்சிறு வெல்வட் மலர்களிலிருந்து பழம் வெள்ளியின் வண்ணத்திலிருந்த அவளது ஷூக்கள் வரை, அப்புறம் அவரது வாழ்வில் அவளை அவர் முதன்முறையாகப் பார்த்தது போலிருந்தது அது.

மிக மெதுவான அசைவுடன், அவள் மீதிருந்த பார்வையை எடுக்காமலேயே அவர் கீழிறங்கி வந்தார்.

அப்புறம் அவர் கீழே வந்தடைந்ததும், தனது இடைவாரில் ஒரு கையை ஓய்வாக வைத்துக்கொண்டு, மேசையை நோக்கி திருப்புளியைக் காண்பித்து, அப்புறம் கூறினார்:

“அது பையன்களல்ல, சென்யோரா. அது பறவைகள்தாம்.”

அதற்குப் பிறகுதான் அவள் மேசையிலிருந்த இறந்த பறவைகளையும் படிக்கட்டுகளின் உச்சியில் இருந்த மனிதனையும், அப்புறம் அவளது படுக்கை அறைகளிலிருந்த முறிந்த திரைச்சீலைகளையும் இணைத்துப் பார்த்துப் புரிந்துகொண்டது.

அவள் கிடு கிடுத்தாள், அவளது வீட்டிலுள்ள படுக்கையறைகள் அனைத்தும் இறந்த பறவைகளாக நிறைந்திருப்பதைக் கற்பனை செய்தவாறு.

“பறவைகளா!” என்று வியந்தாள்.

“பறவைகளே” என்று மேயர் உடன்பட்டார். “பறவைகள் ஜன்னல்களை உடைப்பதும் வீடுகளின் உள்ளே இறப்பதுமான இந்தப் பிரச்சனை எங்களுக்கு மூன்று நாட்களாக இருப்பதால், நீங்கள் இதைக் கவனிக்காதிருந்தது வினோதமாக இருக்கிறது.”

ரெபெக்கா நகர மண்டபத்தை நீங்கியபோது, அவள் வெட்கமடைந்தவளாக உணர்ந்தாள், அப்புறம் நகரத்தின் புரளி அனைத்தையும் வீட்டிற்குள் கொண்டு வந்தவளும் எனினும் பறவைகளைப் பற்றி மூச்சே விட்டிருக்காதவளான அர்ஹேனீதாவைப் பற்றிக் கொஞ்சம் சீற்றமடைந்தவளாகவும் ஆனாள்.

அவளது கைக்குடையை விரித்தாள், வரவிருக்கும் ஆகஸ்டின் பிரகாசத்தினால் திகைத்தாள், அப்புறம் அவள் திணறடிப்பதும் ஆளரவமற்றதுமான தெருவினூடாக நடக்கும் போது அவளுக்கு அனைத்து வீடுகளின் படுக்கையறைகளும் ஒரு கடுமையானதும் மூக்கைத் துளைப்பதுமான இறந்த பறவைகளின் வீச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருந்ததான மனப்பதிவு ஏற்பட்டது.

இது ஜூலை கடைசியாக இருந்தது, அப்புறம் ஒருபோதும் நகரின் சரித்திரத்தில் அது இத்தனை சூடு மிக்கதாக இருந்ததில்லை.

ஆனால் பறவைகளின் மரணத்தினால் எச்சரிக்கை அடைந்திருந்த நகரவாசிகள், அதனைக் கவனிக்கவில்லை.

வினோதமானநிகழ்வானது நகரத்தின் நடவடிக்கைகளைத் தீவிரமாகப் பாதிக்கவில்லை என்ற போதிலும், ஆகஸ்டு மாத தொடக்கம் வரை இதனால் பெரும்பான்மையானவர்கள் தவிக்கும் நிலையிலேயே வைக்கப்பட்டிருந்தார்கள்.

தமது அருட்திருநிலையை அந்தப் பெரும்பான்மையானவர்களுக்கு இடையில் சேர்த்துக் கொள்ளாதிருந்தவரான, காஸ்தானீதா இ மாண்டீய்தா பலிபீட புனித சமயத்துறை சடங்கைச் சேர்ந்த ஆந்தனி இசபெல், மென்னயம் வாய்ந்த வட்டார சமயத்துறைத் துறவியானவர், தொண்ணூற்றி நான்காம் வயதில், தீய ஆவியை மூன்று சந்தர்ப்பங்களில்தான் கண்டிருக்கிறேன் என்று அறுதியிட்டுக் கூறியிருந்தார், அப்புறம் அப்படி இருந்தபோதும் அவர் இரண்டு இறந்த பறவைகளை மட்டுமே கண்டிருந்தார் என்றும், அவற்றிற்குக் குறைந்தபட்ச முக்கியத்துவத்தைக் கூடச் சேர்க்காமலும் தான். முதலாவதை திருப்பூட்டறையில் கண்டிருந்தார், ஒரு செவ்வாய்க்கிழமை திருப்பலி பூசைக்குப் பிறகாக,அப்புறம் அண்டையில் உள்ள ஏதோவொரு பூனையினால் அங்கே இழுத்து வரப்பட்டிருக்கும் என்றும் எண்ணினார்.

மற்றவொன்றை புதன் கிழமையில், சமயவட்டார திருச்சபை மனையின் தாழ்வாரத்தில் கண்டார், அப்புறம் தனது பூட்சின் முனையால் அதனைத் தெருவிற்குத் தள்ளிவிட்டார், பூனைகள் இருக்கவேண்டிய அவசியமே இல்லை என்று எண்ணியவாறு.

ஆனால் வெள்ளிக்கிழமை அன்று, அவர் இருப்புப்பாதை நிலையத்திற்கு வந்துசேர்ந்தபோது, அவர் அமர்வதற்காகத் தேர்ந்தெடுத்த நீள் இருக்கை ஒன்றில் மூன்றாவது இறந்த பறவையைக் கண்டுகொண்டார்.

அதன் சின்னஞ்சிறு கால்களைப் பிடித்து அதன் உடலை அவர் இழுத்தபோது அது ஒரு மின்னல் வெட்டைப் போன்று இருந்தது; அதனைத் தனது கண் மட்டத்திற்கு உயர்த்தினார், அதனைத் திருப்பினார், பரிசோதனை செய்தார், அப்புறம் மலைப்பூட்டும் விதமாக எண்ணிப் பார்த்தார், அருள் பாலிக்கட்டும், இந்த வாரம் நான் கண்ட மூன்றாவது ஒன்று இது.

அந்தக் கணம் தொட்டு நகரத்தில் என்ன நடந்து கொண்டிருந்தது என்பதைக் கவனிக்கத் தொடங்கினார் அவர், ஆனால் மிகவும் நுட்பமாக இல்லாத ஒருவழியில்தான், தந்தை ஆந்தனி இசபெல், அவரது வயது காரணமான பகுதியும் அவர் தீய ஆவியை மூன்று சந்தர்ப்பங்களில் கண்டிருந்தார் என்று சத்தியம் செய்ததால் மறு பகுதியும் (அந்த நகரத்திற்குப் பொருந்தாததாகத் தோன்றிய ஏதோவொன்று), திருச்சபை வட்டாரக் குடிகளால் ஒரு நல்ல மனிதர், அமைதியானவர் மற்றும் உதவும் மனப்பான்மையுடையவர், ஆனால் பழக்கத்திற்கு ஆளானபடியாகப் பகற்கனவு காண்பவர் என்று கருதப்பட்டார்.

பறவைகளுக்கு ஏதோவொன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்பதைக் கவனித்தார், என்றாலும் அது அப்பொழுது ஒரு திருக்கோயில் மேடைப் பிரசங்கத்தை வேண்டும் அளவிற்கு அத்தனை முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது என்பதை அவர் நம்பவில்லை.

அந்த நெடியை அனுபவித்த முதலாவது ஆள் அவர்தான். வெள்ளிக்கிழமை இரவன்று அவர் அதனை நுகர்ந்தார், எச்சரிக்கை உணர்வு மேலிட அவர் விழித்து எழுந்தபோது, அவரது நயநுட்பம் வாய்ந்த ஆழ்துயில் ஒரு குமட்டவைக்கும் நாற்றத்தினால் தடைபட்டது, ஆனால் அவருக்கு இதனை ஒரு கொடுங்கனவுடன் சேர்ப்பதா அல்லது அவரது உறக்கத்தைக் கலைப்பதற்கான தீய ஆவியின் அசலான தந்திரத்துடன் சேர்ப்பதா என்று தெரிந்திருக்கவில்லை.

அவரைச் சுற்றிலும் முகர்ந்து பார்த்தார், அப்புறம் படுக்கையில் புரண்டார், ஒரு திருச்சபை மேடைப் பிரசங்கத்திற்காக அந்த அனுபவம் உதவும் என்று எண்ணியவாறு.

அது, ஐம்புலன்களின் எந்தவொன்றின் வழியாகவும் மனித இதயத்தை ஊடுருவும் சாத்தானின் திறமையைப் பற்றிய ஒரு நாடகீயமான திருச்சபை பிரசங்கமாக இருக்கும் என்று அவர் எண்ணினார்.

அடுத்த நாள் திருப்பலி பூசைக்கு முன்பாக முன்றிலைச் சுற்றி அவர் உலவியபோது, எவரோ ஒருவர் இறந்த பறவைகளைப் பற்றி முதன்முறையாகப் பேசுவதைக் கேட்டார்.

அந்த வாரத்தில் சேகரிக்கப்பட்ட பறவைகளால் தான் கெட்ட இரவுநேர வாடை என்று எவரோ ஒருவர் கூறியதை அவர் கேட்டபோது தான் திருச்சபை பிரசங்கத்தைப் பற்றி, சாத்தானைப் பற்றி, அப்புறம் மோப்ப உணர்வினால் செய்யப்படக்கூடிய பாவங்களைப் பற்றி எண்ணிக்கொண்டிருந்தார்;

அப்புறம் அவரது தலையில் ஆவியெழுப்பும் முன்னெச்சரிக்கைளின் கூட்டவியல்கள், தீய மணங்கள், அப்புறம் இறந்தபறவைகள் உருக்கொண்டன. ஆகையால் அவருக்குஅந்த ஞாயிற்றுக்கிழமையில் அவரும் கூட மிகச் சரியாகப் புரிந்துகொள்ளாத மாண்பதை அன்பின் மீதான ஒரு நீண்ட பத்தியை மேம்படுத்தவேண்டி இருக்கும், அப்புறம் அவர் தீய ஆவி மற்றும் ஐம்புலன்களுக்கு இடையிலான உறவுகளை என்றென்றைக்குமாக மறந்துபோனார்.

இருந்தபோதிலும், அவரது சிந்தனையின் ஏதோவொரு தொலைப்புள்ளியில், அந்த அனுபவங்கள் பதுங்கி இருந்திருக்கவேண்டும்.

அது எப்பொழுதும் அவருக்கு நிகழ்ந்தது, எழுபது வருடங்களுக்கு அதிகம் முன்பாகக் குருமடப் பள்ளியில் மட்டுமல்ல,அவர் தொண்ணூறு வயது கடந்ததும் ஒரு குறிப்பிட்ட வழியில்.

குருமடப் பள்ளியில், ஒரு மிகப் பிரகாசமான பிற்பகலில் இடி முழக்கமற்று ஒரு கனத்த மழைப்பொழிவு உண்டான போது, அவர் சோபோக்ளீசிலிருந்து தேர்ந்தெடுத்த ஒன்றை அதன் அசல் கிரேக்க மொழியில் படித்துக் கொண்டிருந்தபோது.

மழை பெய்து கழிந்த பிறகு, களைப்புற்ற வயலை அவர் ஜன்னல் வழியாக நோக்கினார், புதியதாகக் கழுவப்பட்ட பிற்பகலை, அப்புறம் அவர் பிரித்தறிந்து கொள்ள முடியாததாக இருந்த, இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஒரு பொதுப்படையான ரீதியில், “பழங்காலத்தைய சிறு பழங்கிரேக்கர்கள்” என்று அழைத்த கிரேக்க நாடக அரங்கத்தைப் பற்றியும் செவ்வியல் இலக்கியங்களைப் பற்றியும் முற்றிலும் மறந்து போனார்.

ஒரு மழையற்ற பிற்பகலில், ஒருவேளை முப்பதோ அல்லது நாற்பதோ ஆண்டுகள் பின்னர், அவர் வருகை புரிந்து கொண்டிருந்த ஒரு நகரம் ஒன்றின் உருளைக்கல் பாவப்பட்ட சதுக்கத்தைக் கடந்துகொண்டிருந்தபோது, அவர் குருமடப் பள்ளியில் வாசித்துக்கொண்டிருந்த சோஃபோக்ளீசிலிருந்து ஒரு பத்தியை மனப்பாடமாக ஒப்பித்தார்.

அதே அந்த வாரத்தில், பழங்காலத்தின் சிறு பழங்கிரேக்கர்களைப் பற்றிய ஒரு நீண்ட உரையாடலை, பேச்சளப்பவரும் எளிதாக உள்ளத்தில் எதையும் ஏற்றுக்கொள்பவரும், அவர், தான் கண்டுபிடித்ததாகக் கோரியதும் அது பிற்பாடு ஆண்டுகளுக்குப் பிறகு குறுக்குப்புதிர்கள் என்ற பெயரில் பிரபலமானதுமான குறிப்பிட்ட சிக்கலான புதிர்களின் பால் பிரியமாக இருந்த ஒரு கிழவரான, அப்போஸ்தல உதவியாளருடன் மேற்கொண்டிருந்தார்.

அந்த நேர்முகம் கிரேக்க செவ்வியல் இலக்கியங்கள் பாலான அவரது பழைய உள்ளங்கனிந்த நேசத்தை எல்லாம் ஓர் ஒற்றை அடியில் மீளெடுக்க அவருக்கு இசைவளித்தது. அந்த ஆண்டின் கிறிஸ்துமசில் அவர் ஒரு கடிதத்தைப் பெற்றார்.

அந்தச் சமயத்தில் அவர் இயல்புகடந்த கற்பனையுடனும், தனது விளக்கவுரைகளை அளிப்பதற்கான துணிபுடனும், அப்புறம் அவரது திருச்சபை பிரசங்கங்களின் ஒரு கொஞ்சம் முட்டாள்தனத்துடனும் இருப்பதன் திண்மையான கீர்த்தியை அவர் பெற்றார் என்ற விஷயத்திற்காக வேண்டி மட்டும் இல்லை என்றால், அந்தச் சந்தர்ப்பத்தில் அவர்கள் அவரை ஒரு மேற்றிராணியார் ஆக்கியிருப்பார்கள்.

1885ம் ஆண்டுப் போருக்கு நீண்டகாலம் முன்பாகவே அவர் அந்நகரத்தில் தன்னைப் புதைத்துக் கொண்டார், அப்புறம் அந்தச் சமயத்தில் பறவைகள் படுக்கையறைகளில் இறக்கத் தொடங்கியபோது அவருக்குப் பதிலாக ஒரு இளம் துறவியை அவர்கள் மாற்றிட வேண்டிக்கொண்டு வெகுகாலம் ஆகியிருந்தது,

குறிப்பாக அவர் தீய ஆவியைக் கண்டதாகக் கோரிய பிறகு. அந்தச் சமயம் தொட்டு அவர்கள் அவருக்குக் கவனம் கொடுக்காதவர்களாக ஆகத் தொடங்கினார்கள், கண் கண்ணாடிகள் இன்றியே அவரது திருச்சபை மறைநூலின் நுண்ணிய வரிவடிவங்களை அவருக்கு இன்னும் அடையாளம் கண்டுகொள்ளமுடியும் என்றபோதிலும் அவர் மிகத் தெளிவான வகையில் கவனித்திருக்காத ஏதோவொன்றாக இருந்தது அது.

ஒழுங்கான வழக்கங்களுடையவராக அவர் எப்பொழுதுமே இருந்தார். சிறியவராக, குறிப்பிடத் தக்கதல்லாதவராக, துருத்திய திடமான எலும்புகளுடனும் அமைதியான சைகைகளுடனும், உரையாடுவதற்கான ஓர் ஆறுதல்படுத்தும் குரலுடன் ஆனால் திருக்கோயில் உரைமேடைக்கு மிகஅதிகம் ஆறுதற்படுத்தும் குரலுடனும் இருந்தார்.

மதிய உணவு உண்ணும் வேளை வரையிலும் பகற்கனவு கண்டவாறு தனது படுக்கையறையில் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார், கித்தான் நாற்காலி ஒன்றில் கவனமற்று நீட்டிக் கிடந்தவாறும் கணுக்கால்களில் அடிப்புறங்கள் கட்டப்பட்டிருந்த நீண்ட சாய்வரி கால் சராய்கள் அல்லாத வேறொன்றையும் அணியாதவாறு.

திருப்பலி பூசை செய்வதைத் தவிர வேறு எதையும் அவர் செய்யவில்லை.

வாரம் ஒருமுறை பாவமன்னிப்புக் கூண்டில் அவர் அமர்ந்தார், ஆனால் பல வருடங்களாக எவரொருவரும் பாவமன்னிப்பைக் கேட்கவில்லை.

அவர் வெறுமனே எண்ணியது அவரது திருச்சபை வட்டாரக்காரர்கள் நவீன பழக்கவழக்கங்களால் கடவுள் நம்பிக்கையை இழந்துகொண்டிருக்கிறார்கள் என்று, அப்புறம் அதனால் தான் மூன்று சந்தர்ப்பங்களில் தீய ஆவியைக் கண்டதானது மிகவும் பொருத்தமான நிகழ்வு என்று அவர் நினைப்பது, சனங்கள் தனது வார்த்தைகளுக்குக் கிஞ்சித்தளவே நம்பிக்கையைக் கொடுக்கிறார்கள் என்ற போதிலும் அந்த அனுபவங்களைக் குறித்து அவர் பேசிய போது அவருக்கு அதனை மிகவும் ஒத்துக்கொள்ள வைப்பதற்கு முடியவில்லை என்பதையும் அவர் அறிந்தபோதிலும். அவரைப் பொறுத்தவரை அவர் இறந்துவிட்டார் என்பதைக் கண்டுபிடிப்பது அவருக்கு ஒரு ஆச்சரியமாகவே இருக்கக்கூடும், கடைசி ஐந்து வருடங்களில் மட்டுமல்ல அவர் முதலிரண்டு பறவைகளைக் கண்டுபிடித்த அந்த வியக்கத்தக்க கணங்களிலும் கூடத்தான்.

அவர் மூன்றாவது பறவையைக் கண்டுபிடித்தபோது, அவர் வாழ்விற்குக் கொஞ்சமாகத் திரும்பிவந்தார், ஆகையால்தான் கடைசிச் சில நாட்களில் போற்றத்தக்க அளவில் இருப்புப்பாதை நிலைய நீளிருக்கையில் இறந்த பறவையைப் பற்றி அவர் சிந்தித்துக்கொண்டிருந்தார்.

தேவாலயத்திலிருந்து பத்து அடிகள் தொலைவில், தெருவை நோக்கிய ஒரு தாழ்வாரமும் அலுவலகமாகப் பயன்பட்ட இரண்டு அறைகளையும் படுக்கையறையையும் கொண்ட திரைச்சீலைகள் அற்ற ஒரு சிறிய வீட்டில் அவர் வசித்தார்.

ஒருவேளை குறைந்த துலக்கமான அவரது கணங்களிலாக இருக்கலாம், மிகவும் சூடாக இருக்காதபோது உலகில் மகிழ்ச்சியை அடைவதற்குச் சாத்தியம் என்று அவர் கருதினார், அப்புறம் இந்தக் கருத்து அவரைக் கொஞ்சம் குழப்பியது.

அப்பாலைத் தடங்களின் செல்வழிகளினூடாக அலைந்து திரிய அவர் விரும்பினார். ஒவ்வொரு காலையிலும், கதவைத் திறந்து வைத்து விட்டு, அவரது கண்களை மூடிக்கொண்டு, அவரது தசைகளை விறைப்பாகவும் வைத்துக்கொண்டு படுக்கையறையில் அவர் இருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும்போது அவர் செய்துகொண்டிருந்தது என்னவென்றால் அது இதைத்தான்.

எனினும், குறைந்த பட்சம் மூன்று வருடங்களாக அவரது தியானத்தின் கணங்களில் அவர் இனிமேலும் எதையும் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருக்கவில்லை என்பதால் அவர் அவரது சிந்தனையில் மிகவும் நுணுக்கமாக மாறினார் என்பதை அவரே கூட உணர்ந்திருக்கவில்லை.

பன்னிரெண்டு மணிக்கு மிகச்சரியாக, ஒவ்வொரு நாளும் அதே பொருட்களைக் கொண்டிருந்த ஒரு பள்ளம் பள்ளமான தட்டத்துடன் ஒரு பையன் இடைநாழியைக் கடந்து வந்தான்: ஒரு துண்டு யுக்கா கிழங்குடன் எலும்பு வேகவைத்தச் சாறு, வெள்ளைச் சோறு, வெங்காயம் இன்றிச் சமைக்கப்பட்ட இறைச்சி, வாழைப்பழ பொறியல் அல்லது ஒரு வட்டமான சோள நெய்யப்பம், அப்புறம் பலிபீடத்தின் சமயமுறை சடங்குப் பிரிவைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல் ஒருபோதும் சுவைக்காத ஒரு சில அவரைகளையும்.

துறவி அமர்ந்திருந்த நாற்காலிக்கு அடுத்துத் தட்டத்தைப் பையன் வைத்தான், ஆனால் துறவி இடைநாழியில் இனிமேலும் காலடியோசைகளைக் கேட்காதவரையிலும் தனது கண்களைத் திறக்கவில்லை.

ஆகையால், நகரத்தில் அவர்கள் நினைத்தார்கள் தந்தை தனது உச்சிவேளை உறக்கத்தை மதிய உணவுக்கு முன்பாக எடுத்துக் கொண்டிருக்கிறார் (மிகவும் முட்டாள்தனமாகத் தோன்றிய ஒரு விஷயம்) என்று இரவிலும் கூட அவர் சாதாரணமாக உறங்குவதில்லை என்பது உண்மையானது என்று இருக்கும்போது.

அந்தக் காலவாக்கில் தான் அவரது பழக்கங்கள் மிகவும் குறைந்த அளவு சிக்கலுடைவையாக ஆனது, கிட்டத்தட்ட பழங்குடி நிலையில்.

தனது கித்தான் நாற்காலியிலிருந்து அசையாமலேயே மதிய உணவுஅருந்தினார், தட்டத்திலிருந்து உணவை எடுக்காமலேயே, பதார்த்தங்களையோ அல்லது முட்கரண்டியையோ அல்லது கத்தியையோ பயன்படுத்தாமல், ஆனால் அவர் தனது சூப்பைக் குடித்த அதே கரண்டியை வைத்து, பின்னர் அவர் எழுவார், கொஞ்ச தண்ணீரைத் தலையில் தெளித்துக்கொள்வார், மிகப்பெரிய சதுர ஒட்டுக்களால் புள்ளியிடப்பட்ட அவரது வெள்ளை குருமார் நீளங்கியை அணிந்து கொண்டு, அப்புறம் இருப்புப்பாதை நிலையத்திற்கு நகரின் மற்ற அனைவரும் உச்சிவேளை உறக்கத்திற்குச் சாய்ந்து கொண்டிருக்கும் மிகத் துல்லியமான வேளையில் செல்வார்.

பல மாதங்களாக இந்தப் பாதையில் அவர் சென்றுகொண்டிருக்கிறார், தீய ஆவி கடைசித் தடவை அவர் முன் தோன்றியபோது அவரே உண்டாக்கிய பிரார்த்தனையை முணுமுணுத்தபடி.

ஒரு சனிக்கிழமை - இறந்த பறவைகள் வீழ்வது தொடங்கிய ஒன்பது நாட்களுக்குப் பிறகு - பலி பீடத்தின் புனித சமய சடங்குமுறையைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல், ரெபெக்காவின் வீட்டின் நேர்முன்பாக, அவருடைய காலடியில் ஓர் இறந்துகொண்டிருக்கும் பறவை விழுந்தபோது இருப்புப்பாதை நிலையத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்.

உள்ளுணர்வின் ஒரு கணநேர அழற்பாய்ச்சல் அவரதுதலையில் வெடித்தது, அப்புறம் அவர் உணர்ந்தார் இந்தப் பறவையானது, மற்றவற்றிற்கு முரணாக, காப்பாற்றப்படலாம் என்று. அதனை அவர் தன் கரங்களில் ஏந்தி ரெபெக்காவின் கதவைத் தட்டினார் அவள் தனது உச்சிவேளை உறக்கத்தை உறங்குவதற்காகத் தனது இரவிக்கையை ஊக்கவிழ்த்துக் கொண்டிருந்தபோது.

அவளது படுக்கையறையில், விதவை தட்டப்படுவதைக் கேட்கவும் உள்ளுணர்வு சார்ந்து அவளது நோட்டத்தைத் திரைச்சீலைகளை நோக்கித் திருப்பவும் செய்தாள்.

இரண்டு நாட்களாக எந்தப் பறவையும் படுக்கையறைக்குள் வந்துவிட்டிருக்கவில்லை. ஆனால் திரைச்சீலையானது இன்னும் கிழிந்திருக்கிறது.

அவளைப் பதற்றத்துடனும் கவலையுடனும் வைத்திருந்த பறவைகளின் ஆக்கிரமிப்பு படையேற்றமானது தொடரும் வரை அவற்றைச் செப்பம் செய்வது வீணான செலவீனம் என்று அவள் கருதினாள்.

மின்சார விசிறியின் ரீங்காரத்திற்கு மேலாக, கதவு தட்டப்படுவதை அவள் கேட்கவும் தாழ்வாரத்தின் கோடியில் படுக்கையறையில் அர்ஹேனீதா உச்சிவேளை உறக்கத்தில் ஆழ்ந்திருப்பாள் என்பதைப் பொறுமையின்மையுடன் நினைவுகூரவும் செய்தாள்.

அந்த வேளையில் அவள்மீது வலிந்து சுமத்துவது யாராக இருக்கலாம் என்று வியப்படைவதற்கு அவளுக்குத் தோன்றக் கூட இல்லை.

அவளது இரவிக்கையின் ஊக்கை மீண்டும் மாட்டினாள்.

திரைசீலைக் கதவைத் தள்ளித் திறந்து, அப்புறம் இடைவழி தூரம் மொத்தம், விறைப்பாகவும் நேராகவும் நடந்து சென்று, பிறகு அறைகலன்களாலும் அலங்காரப் பொருட்களாலும் நெரிசலுற்றிருந்த வசிப்பறையைக் கடந்து அப்புறம், கதவைத் திறப்பதற்கு முன்னர், உலோக திரைச் சீலையின் வழியாக மிகுதியாகப் பேசாத தந்தை ஆந்தனி இசபெல் அவரது கண்களை மூடியவாறும் ஒரு பறவையைக் கைகளின் தாங்கியவாறும் நிற்பதைக் கண்டாள்.

அவள் கதவைத் திறப்பதற்கு முன்னால், அவர் கூறினார், ‘இதற்குக் கொஞ்சம் தண்ணீர் தரவும் பிறகு உண்பதற்குக் கொஞ்சம் தந்தோம் என்றால், இது நன்றாகும்.’ அப்புறம் அவள் கதவைத் திறந்தபோது, அச்சத்தினால் குலைந்து வீழ்வாள் என்று எண்ணினாள் ரெபெக்கா.

ஐந்து நிமிடங்களுக்குக் கூடுதலாக அவர் அங்கே தங்கவில்லை.

சந்திப்பைச் சுருக்கியது தான்தான் என்றுநினைத்தாள் ரெபெக்கா. ஆனால் உண்மையில் துறவிதான் சுருக்கியது.

அந்தக் கணத்தில் அதனைப் பற்றி விதவை நினைத்துப் பார்த்திருந்தாள் என்றால், துறவி, நகரத்தில் அவர் வாழ்ந்துகொண்டிருந்த முப்பது வருடங்களில், அவளது வீட்டில் ஐந்து நிமிடங்களுக்குக் கூடுதலாக ஒருபோதும் செலவிட்டிருக்க வில்லை என்று உணர்ந்திருப்பாள்.

எத்தனை தூரம் என்றாலும், ஒவ்வொருவரும் அறிந்திருந்ததைப் போன்று அவள் மேற்றிராணியாருடன் சொந்த உறவாக இருந்தாள் என்ற போதிலும், வசிப்பறையின் அலங்காரங்களின் ஊதாரித்தனங்களுக்கிடையே வீட்டின் இல்லக்கிழத்தியின் பாலிணைவு விழையும் உள்ளுரு தன்னைத் தெளிவாகக் காட்டிக்கொண்டது என்றே  அவருக்குத் தோன்றியது.

மேலும், ரெபெக்காவின் குடும்பத்தைப் பற்றிய கட்டுக்கதை (அல்லது ஒரு கதை) இருந்தது, அது நிச்சயமாக, விதவையுடைய பெற்றோரின் உடன்பிறப்பின் சேயான குடும்ப ஈடுபாட்டில் அக்கறை காட்டாதவர் என்று அவள் கருதிய கர்னல் அவ்ரலியானோ புயெந்தியா, ஒருமுறை மேற்றிராணியானவர் இந்நகரத்திற்கு வந்திருக்காதது அவரது உறவுக்காரர்களைக் காண்பதைத் தவிர்ப்பதற்கு வேண்டித்தான் என்று ஆணையிட்டுக் கூறினார் என்ற விஷயம் இருந்த போதிலும், மேற்றிராணியாரின் மாளிகையை அது அடைந்திருக்கவில்லை என்று நினைத்தார் தந்தை.

விஷயம் என்னவாக இருந்த போதிலும், அது வரலாறாகவோ அல்லது கட்டுக்கதையாகவோ இருக்கட்டும், தெய்வபக்தியின் எந்த அறிகுறிகளையும் காட்டாமலும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் பாவமன்னிப்பைக் கோரவும் ஆனால் அவர் அவளது கணவனின் மரணத்தைப் பற்றிய புதிரைப் பற்றிக் கட்டாயப்படுத்த முயன்றபோது தட்டிக்கழிப்பதான விடைகளை மட்டுமே எப்பொழுதும் பதிலளித்த அதன் ஒரேயொரு குடியிருப்பாளினியின், இந்த வீட்டில் பலிபீடத்தின் புனித சமயமுறை சடங்கைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல் சௌகரியமாக உணரவில்லை.  இறந்துகொண்டிருக்கும் பறவையைக் குளிப்பாட்டுவதற்காக ஒரு கிளாஸ் தண்ணீரை அவருக்குக் அவள் கொண்டு வருவதற்காக அவர் காத்துக்கொண்டு, அவர் அங்கே இருந்தார் என்றால், அவருக்குப் பொறுப்பில்லாத ஒரு தற்செயலான நிகழ்வின் விளைவாகத்தான் இருந்தது அது.

விதவை திரும்பி வருவதற்காகக் காத்துக்கொண்டிருந்தபோது, துறவி, ஆடம்பரமான செதுக்கப்பட்ட மர ஆடுநாற்காலி ஒன்றில் இருந்துகொண்டு, இருபது வருடங்களுக்கு அதிகம் முன்பாக, ஒரு கைத்துப்பாக்கி வேட்டு ஒலிக்கவும், அப்புறம் கர்னலின் ஒன்றுவிட்ட உடன்பிறந்தானும் அவரது சொந்த மனைவியின் ஒன்று விட்ட உடன்பிறந்தானும் ஆன ஹோசே அர்காதியோ புயெந்தியா, அவன் அப்போதுதான் கழற்றியிருந்த இன்னும் கதகதப்பாக இருந்த கால்சராயில் இருந்த கொளுவிகள் மற்றும் குதிமுள்களின் கலகலப்பிற்கு இடையே தலைக் குப்புற விழுந்த காலம் தொட்டு அமைதியாக இருந்திராத அந்த வீட்டின் வினோதமான ஈரப்பதத்தை உணர்ந்தார்.

வசிப்பறைக்குள் ரெபெக்கா மீண்டும் பாய்ந்து வந்தபோது, அவளை அச்சுறுத்திய தெளிவற்ற தன்மையின் வாடையுடன் ஆடுநாற்காலியில் தந்தை ஆந்தனி இசபெல் அமர்ந்திருப்பதை அவள் கண்டாள்.

“விலங்கொன்றின் வாழ்வானது, ஒரு மனிதனுடையதைப் போன்றே அத்தனை நேசமிக்கது நமது கர்த்தாவுக்கு” என்றார் தந்தை.

அவர் சொன்னது போல, ஹோசே அர்க்காதியோ புயெந்தியாவை நினைவு கூர்ந்திருக்கவில்லை. விதவையும்கூட அவனை நினைவு கூர்ந்திருக்கவில்லை. திருக்கோயில் சமய உரை மேடையிலிருந்து மூன்று முறை தீய ஆவிகள் அவர் முன் தோன்றியதை பேசியது முதற்கொண்டு தந்தையின் வார்த்தைகளுக்கு எந்த நம்பகத்தன்மையையும் அளிக்காமல் இருப்பதையே அவள் வழக்கமாகக் கொண்டிருந்தாள்.

அவருக்குக் கவனத்தைச் செலுத்தாமலேயே அவள் பறவையைத் தனது கையில் எடுத்து, ஒரு கிளாஸ் தண்ணீரில் அதனை முக்கவும், அதற்குப் பிறகு அதனைக் குலுக்கவும் செய்தாள்.

அவளது செய்யும் முறையில் பணிவடக்கமின்மையும் கவனக்குறைவும் இருந்ததைத் தந்தை கவனித்தார், விலங்கதன் வாழ்வின் பாலான ஒரு முழுமுற்றான சலுகையின்மை.

“பறவைகளை உனக்குப் பிடிக்காதா” என்றார் மென்மையாக ஆனால் அழுத்தத்துடன்.

பொறுமையின்மை மற்றும் பகைமையின் குறிப்புணர்த்தும் விதமாகத் தனது கண்ணிமைகளை உயர்த்தினாள் விதவை.

“நான் அவற்றை ஒருபோது விரும்பி னேன் என்றாலும், நமது வீடுகளுக்கு உள்ளே இறக்கத் தொடங்கியதனால் தற்போது அவற்றை நான் வெறுக்கிறேன்.”

“பல இறந்துவிட்டிருக்கின்றன” என்று விட்டுக் கொடுக்காதவாறு கூறினார்.

அவரது குரலின் தொனியில் ஒரு மிகப்பெரும் புத்திசாலித்தனம் இருந்ததாக ஒருவருக்கு நினைக்க முடியும்.

“அவை எல்லாம்” என்றாள் விதவை. விலங்கதனை வெறுப்பினால் பிழிந்து அதனை ஒரு தட்டில் வைத்தபோது, “அப்புறம் அவை எனது திரைச் சீலைகளைக் கிழித்துவிட்டிருக்கவில்லை என்றாலும்கூட அது என்னைத் தொந்தரவு செய்து இருக்காது” என்று அவள் சேர்த்துக் கூறினாள்.

இதயத்தின் இத்தகைய கடுந்தன்மையை அவர் ஒருபோதும் அறிந்திருக்கவில்லை என்றே அவருக்கு தோன்றியது அப்புறம்.

ஒரு கணம் கழிந்து, சின்னஞ்சிறியதும் தற்காப்பற்றதுமான உடலைத் தனது சொந்தக் கரத்தில் தாங்கியவாறு, அது சுவாசிப்பதை நிறுத்திவிட்டிருப்பதாக உணர்ந்தார் துறவி. அப்புறம் அவர் அனைத்தையும் மறக்கவும் - வீட்டின் ஈரப்பதத்தை, மட்டுமீறிய சிற்றின்ப வேட்கையை, ஹோசே அர்க்காதியோ புயெந்தியாவின் உடலின் மீதான வெடிமருந்தின் தாங்கவொண்ணா நெடியை - அந்த வாரத்தின் தொடக்கம் தொட்டு அவரைச் சூழ்ந்திருந்த அதிசயமான உண்மையை உணர்ந்தார்.

அங்கே, ஓர் அல்லற்படும் முகபாவத்துடனும் தனதுகரங்களில் இறந்த பறவையுடனும் அவர் வீட்டை நீங்கிச் செல்வதை விதவை கவனித்தபோது, நகரத்தின் மீது வீழ்ந்துகொண்டிருந்த இறந்த பறவைகளின் மழையானதின் ஓர் அற்புதகரமான வெளிப்பாட்டை அவர் கண்டுணர்ந்தார், அப்புறம் அவர், கடவுளின் செயற்பணியாளரானவர், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், அது மிகவெப்பமாக இல்லாதபோது மகிழ்ச்சியை அறிந்திருந்தவர், இறுதி அழிவைப்பற்றிய திருவெளிப்பாட்டை முற்றாக மறந்து விட்டிருந்தார்.

எப்பொழுதையும் போலவே, அவர் நிலையத்திற்குச் சென்றார், ஆனால் அவரது செயல்பாடுகளைப் பற்றி முழுவதுமாக அவர் அறிந்திருக்கவில்லை.

உலகில் ஏதோவொன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று துல்லியமற்ற வகையில் அறிந்திருந்தார், ஆனால் குழப்பமுற்றதாக உணர்ந்தார், பேச்சற்றுப் போனார், அந்தக் கணத்திற்கு ஒவ்வாதவராக ஆனார்.

நிலையத்தில் நீளிருக்கையில் அமர்ந்தவாறு, இறுதி அழிவைப் பற்றிய திருவெளிப்பாட்டில் இறந்தப்பறவைகளின் மழையைப் பற்றி ஏதாவது இருந்ததா என்று நினைவுகூர முயன்றார், ஆனால் அவர் அதனை முற்றிலுமாக மறந்துவிட்டிருந்தார்.

திடீரென்று ரெபெக்காவின் வீட்டில் ஏற்பட்ட தாமதமானது அவருக்கு இரயிலைத் தவறவிட வைத்தது என்று எண்ணினார், அப்புறம் அவரது தலையைப் புழுதியாகவும் உடைந்தும் இருந்த கண்ணாடிக்கு மேலாக நீட்டவும் பயணச்சீட்டு அலுவலகத்திலுள்ள கடிகாரத்தில் அது ஒரு மணி ஆவதற்கு இன்னமும் பன்னிரெண்டு நிமிடங்கள் இருந்தது என்பதைக்காணவும் செய்தார்.

நீளிருக்கைக்குத் திரும்பியபோது, அவர் மூச்சுத் திணறிக் கொண்டிருந்ததாக உணர்ந்தார். அந்தக் கணத்தில் அது சனிக்கிழமையாக இருந்தது என்று நினைவுகூர்ந்தார்.

அவரது பின்னல் கைவிசிறியை சிறிதுநேரம் ஆட்டினார், அவரது உள்வயமான மூடாக்கில் தொலைந்துபோனார்.

அப்புறம் அவர் அவரது நீளங்கியில் இருந்த பித்தான்களின் மேலும் தனது பூட்சுகளின் மேலுள்ள பித்தான்களிலும் அவரது நீண்ட, ஒயிலான, துறவியின் காற்சட்டைகளிலும் தனது விரல்களைக் கொண்டு உராய்ந்தார், அப்புறம் அவரது வாழ்வில் இத்தனை சூடாக அவர் ஒருபோதும் உணர்ந்ததில்லை என்பதை எச்சரிக்கையுடன் கவனித்தார்.

நீளிருக்கையிலிருந்து நகராமலேயே அவரது நீளங்கியின் கழுத்துப்பட்டையின் பித்தான்களைக் கழற்றினார், அப்புறம் தனது சட்டைப்பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து, அப்புறம் வெளிச்சம் பாய்ச்சிய உணர்ச்சிக் கனிவின் ஒரு கணத்தில், அவர் ஒருவேளை ஒரு நிலநடுக்கம் வந்துகொண்டிருப்பதைக் கண்டுகொண்டிருக்கிறோம் என்று எண்ணியவாறு, வெப்பத்தினால் கன்றியிருந்த தனது முகத்தைத் துடைத்தார்.

அவர் அதை எங்கேயோ வாசித்திருந்தார். இருந்தபோதிலும் வானம் தெளிந்து இருந்தது:

பறவைகள் அனைத்தும் கண்காணாது போயிருந்த தெள்ளத் தெளிந்த நீலவானம். நிறத்தையும் தெள்ளத் தெளிந்த தன்மையையும் அவர் கவனித்தார், ஆனால் ஒரு கணத்திற்கு இறந்த பறவைகளை மறந்திருந்தார்.

இப்பொழுது அவர் வேறு எதைப் பற்றியோ நினைத்துக்கொண்டிருந்தார்,

ஒரு புயல் வரப்போகும் சாத்தியத்தைப் பற்றி. இருந்தபோதிலும் வானமானது மெல்லியதாகவும் சாந்தமிக்கதாகவும் இருந்தது, அவர் ஒருபோதும் சூட்டை உணர்ந்திராத, வேறு ஏதோ நகரத்தின் மீதிருக்கும் வானம் அது என்பதைப் போன்று, தொலைவானதாகவும் வேறுபட்டதாகவும், அப்புறம் அதைப் பார்த்துக்கொண்டிருந்தது, தனது அல்லாத வேறு எவருடையதோ கண்கள் என்பதைப் போன்று.

அப்புறம் அவர் வடக்குத் திசையில், பனையோலைகள் மற்றும் துருப்பிடித்தத் துத்தநாகத்தின் கூறைகளுக்கும் மேலாக நோக்கவும், மெதுவான, நிசப்தமான, பருந்துகளின் ஓசையொழுக்கான கொத்தைகளை மடுவிற்கு மேலாகப் பார்க்கவும் செய்தார்.

புதிரான சில காரணத்துக்காக, அவர் குருமடப்பள்ளியில், தனது சிறு உத்தரவுகளை நிறைவேற்றுவதற்குச் சற்றைக்கு முன்பாக ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று உள்ளத்தில் உணர்ந்த மனக்கிளர்ச்சிகளை அந்தக் கணத்தில் மீண்டும் நினைத்துப் பார்த்தார்.

தனது தனிப்பட்ட நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்ள ஊர் வட்டகை குரு இவருக்கு அனுமதி கொடுத்திருக்கவும், பழம் மரக்கட்டையின் மணம் வீசும், ஊர் வட்டகைக் குருவின் கோணலான சின்னஞ்சிறு கிறுக்கலால் உரைவிளக்கம் எழுதப்பட்டிருந்த மஞ்சளேறிய புத்தகங்களை வாசிப்பதில் ஈர்ப்புற்ற வாறு இவர் மணிநேரங்களாக அங்கே வழக்கமாகத் தங்கிவிடுவார்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று, ஒருநாள் முழுவதும் அவர் வாசித்ததற்குப் பிறகு, அவர்வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் பக்கங்களிலிருந்து வெளிப்படையாக விழுந்து கிடந்த ஓர் அட்டையை எடுப்பதற்காக, ஊர் வட்டகைக் குருவானவர் அறைக்குள் நுழைந்து அவசரம் காட்டி, அதிர்ச்சியடைந்தார்.

அவரது திருமட முதல்வரின் குழப்பத்தை மிக எச்சரிக்கையான மெத்தனத்துடன் அவர் கவனித்தார் என்றாலும், அந்த அட்டையை அவருக்கு வாசிப்பதற்கு இயன்றது. ஓரேயொரு வாக்கியம் மட்டுமே அதில் இருந்தது, ஊதா மையில் எழுதப்பட்டிருந்த ஒரு தெளிவான, நேரான கையெழுத்தில்: “திருவாட்டி இவெத்தே இன்றிரவு இறந்தாள்.” ஓர் அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலம் கழிந்து, மறக்கப்பட்டிருந்த ஒரு நகரத்தின் மீதாகப் பருந்துகளின் கொத்தை ஒன்று பறப்பதைக் கண்டவாறு, மேசையின் முன்பாக ஊதா நிறத்தில், விளங்கிக்கொள்ள முடியாத வகையில் வேகவேகமான மூச்சிரைப்புடன், தன்முன் அமர்ந்திருந்த ஊர்வட்டகைக் குருவின் துயரம் நிரம்பிய முகவுணர்ச்சியை அவர் நினைவுகூர்ந்தார். அந்தக் கருத்துத் தொடர்பினால் உலுக்கப்பட்டவாறு, அதற்கு அப்புறம் அவர் உஷ்ணத்தை உணரவில்லை, ஆனால் இன்னுஞ்சரியாகச் சொல்வதென்றால் மிகச்சரியான எதிரிடையான, பனிக்கட்டியின் தேள்கொட்டலை தனது அடிவயிற்றிலும் தனது காலின் பாதங்களிலும் உணர்ந்தார்.

அந்தப் பேரச்சத்தின் மிகத்துல்லியமான காரணம் என்ன என்பதைப் பற்றி அறியாமலேயே அவர் அச்சமுற்றார், பலிபீடத்தின் புனித சமயசடங்குமுறை பிரிவைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல், அந்த நிகழ்வுக்குப் பாராமுகம் காட்டி, அப்போது அவர் இருந்தபோது, குழப்பமிக்கக் கருத்துகளின் ஒரு வலையில் சிக்கி, அவைகளுக்கிடையில், சகதியில் சிக்கிக்கொண்ட சாத்தானின் குளம்பிலிருந்து, உலகின் மேல் விழும் இறந்த பறவைகளின் ஒரு திரளிலிருந்து, ஒரு குமட்டும் உளப்பாட்டை வேறுபடுத்திக் கொள்வதற்கு இயலாததாக இருந்தது.

அப்புறம் அவர் நிமிர்ந்து இருந்தார், வெறுமையில் தொலைந்துபோன ஒரு வாழ்த்துதலைத் தொடங்குவதுபோல, வியப்பார்வத்தில் ஒரு கையை உயர்த்தி, அப்புறம் பேரச்சத்தில், “அலைந்துதிரியும் யூதன்” என்று கூக்குரலிட்டார்.

அந்தக் கணத்தில் இரயில் சீழ்கையடித்தது. பலவருடங்களில் முதன்முறையாக அவர் அதைக்கேட்கவில்லை.

புகையின் ஒர் அடர்த்தியான மேகத்தினால் சூழப்பட்டு, நிலையத்திற்குள் இழுக்கப்பட்டுக்கொண்டு வருவதை அவர் கண்டார், அப்புறம்துருப்பிடித்தத் துத்தநாகத் தகடுகளுக்கு மேலாகத் தணல் கரிக்கங்குகளின் மழை சொரிவதையும் கண்டார்.

ஆனால் நான்கு மணிக்கு சிறிதுநேரம்கழிந்து, ஞாயிற்றுக்கிழமை அவர் வழங்கப் போகும் உளத்தைப் பதியவைக்கும் பிரசங்கத்தின் இறுதி வடிவங்களை வடித்துக்கொண்டிருந்தபோது, அந்தப் பிற்பகல் நேரம்வரைக்கும் அந்தத் தொலைவானதும் விளங்கிக்கொள்ளமுடியாததுமான கனவிலிருந்து அவர் முற்றாக விழித்தெழுந்திருக்கவில்லை.

எட்டு மணி நேரங்களுக்குப் பிறகு, பெண் ஒருத்திக்கு கடைசி யான திருமுழுக்காட்டு கொடுக்கப்படுவதற்காக அவர் அழைக்கப்பட்டார்.

அதன் விளைவாக இரயிலில் அந்தப் பிற்பகலில்யார் வந்து சேர்ந்தது என்பதைத் தந்தைக்கு அறியஇயலாமல் போனது.

நீண்ட காலமாகவே இற்றுப் போய் விழும் நிலையில் இருப்பதும் வண்ணமற்றதுமான நான்கு இரயில்பெட்டிகள் கடந்து செல்வதைக்கவனித்தவாறு இருந்தார், அப்புறம் எவரொருவரும் தங்குவதற்காக இறங்கி வருவதை அவருக்கு நினைவுகூர முடியாமல் இருந்தது, குறைந்தபட்சம் சமீபத்தையவருடங்களில்.

முன்பு அது வேறுமாதிரியாக இருந்தது, ஒரு முழுப் பிற்பகலிலும் வாழைப் பழத் தார்கள் ஏற்றப்பட்ட இரயில் கடந்து செல்வதை அவர் காண்பதற்குச் செலவிட முடிந்தபோது; பழக்குலைகள் ஏற்றப்பட்ட ஒரு நூற்று நாற்பது இரயில் பெட்டிகள், இரவு நன்கு கவியும் வரைக்கும், ஒரு பச்சை இலாந்தர் விளக்கை ஆட்டும் மனிதன் இருந்த கடைசிப் பெட்டி கடந்து செல்லும் வரை, முடிவற்று கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.

அப்புறம் அவர் இருப்புப்பாதையின் மறுபக்கத்திலிருந்த நகரத்தைக் கண்டார் - விளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன இப்போது - அப்புறம் அவருக்குத் தோன்றியது, வெறுமே இரயில் கடப்பதைக் கண்டுகொண்டிருப்பதானது, வேறொரு நகரத்திற்கு அவரைக் கொண்டுசென்றதைப் போல ஆனது.

ஒருவேளை அதிலிருந்து வந்ததாக இருக்கலாம் ஒவ்வொரு நாளும் நிலையத்திற்கு அவர் வந்து இருப்பதான வழக்கம், அவர்கள் தொழிலாளர்களைச் சுட்டுக்கொல்லவும் வாழைப்பழத் தோட்டங்கள் அனைத்தும் அழிந்ததற்குப் பிறகும் கூட, அப்புறம் அதனுடன் அந்த நூற்றி நாற்பது இரயில் பெட்டிகளும் தீர்க்கப்பட்டன, அப்புறம் எஞ்சவிடப் பட்டது எவரொருவரையும் அழைத்துவரவோ எவரொருவரையும் அழைத்துச் செல்லவோ செய்யாத அந்த மஞ்சளேறிய, புழுதிபடிந்த இரயில் மட்டுமே.

ஆனாலும் அந்தச் சனிக்கிழமை எவரோவொருவர் வரத்தான் செய்தார்.

பலிபீடத்தின் புனித சமயச் சடங்குமுறை பிரிவைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல்நிலையத்தை விட்டுச் சென்றபோது, தனது பசியை அல்லாத வேறு எதையும் பற்றிக் குறிப்பிடத்தகுந்ததாக இல்லாத அமைதியான பையன் ஒருவன் அதற்கு முந்தைய நாள் தொட்டு தான் உணவு ஏதும் உண்டிருக்கவில்லை என்பதை அவன் நினைவுகூர்ந்தபோதுதான் கடைசிப் பெட்டியிலிருந்து துறவியைக்கண்டான்.

துறவி ஒருவர் இருந்தார் என்றால், விடுதி ஒன்றும் இருந்தாகவேண்டும் என்று, அவன் எண்ணினான். அப்புறம் அவன் இரயிலிலிருந்து இறங்கி, உலோகம் போன்ற ஆகஸ்டுச் சூரியனால் கொப்புளமாகக் கொதித்துக் கிடந்த தெருவைக் கடந்து, அப்புறம் தேய்ந்துபோன கிராமபோனின் ஒலி வந்த நிலையத்தின் எதிரில் அமைந்திருந்த ஒரு வீட்டின் குளிர் நிழலுக்குள் நுழைந்தான்.

இருதினங்களின் பட்டினியால் கூர்மையாக்கப்பட்ட, அவனது நுகர்வுணர்வு, அது ஒரு விடுதிதான் என்று அவனிடம் கூறியது.

அப்புறம் அவன் தன் வாழ்நாளில் ஒருபோதும் படிக்கவே போகாததான ஓர் அடையாளமான, ‘ஹோட்டல் மக்காந்தோ’ என்ற அடையாளத்தைக் காணாமலேயே அதற்குள் சென்றான்.

அதன் உடைமையாளினி ஐந்து மாதங்களுக்கும் கூடுதலான கர்ப்பத்துடன் இருந்தாள்.

அவள் கடுகின் நிறத்தில் இருக்கவும், அவளது தாய் அவளைக் கர்ப்பமாகக் கொண்டிருந்த அதே போன்று மிகச்சரியாகவும் காணப்பட்டாள் (என்ன ஒரு கண்றாவியான மொழி பெயர்ப்பு).

அவன் உத்தரவிட்டான், “மதிய உணவு, உங்களால் இயன்ற அத்தனை சீக்கிரம்” அப்புறம் அவள், அவசரப்படுவதற்கு முயலாமல், வெறும் எலும்புடைய ஒரு சூப்பினையும் அதனுள் கொஞ்சம் வாழைக்காயையும் நறுக்கி இட்டுக்கொடுத்தாள்.

அந்தக் கணத்தில் இரயில் சீழ்கையடித்தது. சூப்பின் வெம்மையிலும் ஆரோக்கியமான ஆவியாலும் ஈர்க்கப்பட்டு, அவனுக்கும் நிலையத்திற்குமிடையில் கிடக்கும் தொலைவைக் கணக்கிட்டான், அப்புறம் தவறவிடும் ஒரு இரயில் விளைவிக்கும் பீதியின் குழப்பமான அந்த உணர்வுநிலை தன்னை ஆக்கிரமித்தது என்று உடனடியாக உணர்ந்தான்.

அவன் ஓடுவதற்கு முயன்றான்.

அவன் கதவை அடைந்தான், கடுவேதனையில், இரயிலைப் பிடிப்பதற்குத் தனக்கு நேரமில்லை என்று அவன் உணர்ந்தபோது வாயிற்படிக்கு அப்பால் அவன் ஒரு காலைக் கூட எடுத்து வைத்திருக்கவில்லை.

அவன் மேசைக்குத் திரும்பியபோது, தனது பசியை மறந்துவிட்டிருந்தான்; கிராமபோனுக்கு அடுத்து இருந்த பெண், தனது வாலை ஆட்டும் ஒரு நாயின் பயங்கரமான முகவுணர்வுடன் தன்னை இரக்கத்துடன் நோக்குவதை அவன் கண்டான்.

அப்புறம், அந்த முழுநாளில் முதன்முறையாக, இரண்டு மாதங்களுக்கு முன்பு அவனது அம்மா அவனுக்குக் கொடுத்திருந்த அவனது தொப்பியைக் கழற்றினான், அப்புறம் அவன் உண்பதை முடிக்கும்போது அதனைத் தனது முழங்கால்களுக்கு இடையில் வைத்துக் கொண்டான்.

அவன் மேசையிலிருந்து எழுந்தபோது, தவறி விட்ட இரயிலினாலோ, அல்லது அதன் பெயரைக் கண்டுபிடிப்பதற்கான சிரமத்தை மேற்கொள்ளாமல் அவன் இருந்த அந்நகரத்தில் வாரக்கடைசியைச் செலவழிக்கும் வாய்ப்பு பற்றியோ அவன் சஞ்சலம் அடைந்ததைப் போன்று தோன்றவில்லை.

அவனதுமுதுகின் எலும்புகள் ஒரு கடினமான, நேரான நாற்காலியினால் தாங்கப்பட்டு அறையின் ஒரு மூலையில் அவன் அமர்ந்தான், அப்புறம் நீண்ட நேரத்திற்கு அங்கே அமர்ந்திருந்தான், ரெக்கார்டு இசைக்குச் செவி கொடுக்காமல் அவற்றை எடுத்துக் கொண்டிருந்த பெண்:

“தாழ்வாரத்தில் இன்னும் குளிர்ச்சியாக இருக்கும்” என்று அவனிடம் கூறும் வரை.

நோவுற்றதாக உணர்ந்தான் அவன். அந்நியர்களுடன் உரையாடலைத் துவக்குதற்கு ஒரு முயற்சி தேவைப்பட்டது.

ஆட்களை அவர்களின் முகத்தில் நோக்கு வதற்கு அவன் அச்சமடைந்தான், அப்புறம் அவனுக்கு பேசுவதை அல்லாத வேறு வழி இல்லாததனால், அவன் நினைத்ததைக் காட்டிலும் வேறுபட்டவகையில் சொற்கள் வெளிவந்தன. “ஆம்” என்று அவன் பதிலளித்தான்.

அப்புறம் அவன் ஒரு லேசான நடுக்கத்தை உணர்ந்தான். நாற்காலியில் ஆடுவதற்கு முயன்றான், அவன் ஓர் ஆடுநாற்காலியில் அமர்ந்திருக்கவில்லை என்பதை மறந்தவாறு.

“இங்கே வரும் ஆட்கள் தாழ்வாரத்திற்கு ஒரு நாற்காலியை இழுத்துச் செல்வார்கள் அங்கே குளிர்ச்சியாக இருப்பதால்” என்று சிறுமி கூறினாள்.

அப்புறம், அவளைக் கவனித்தவாறு, அவள் பேசுவதற்கு எவ்வளவு ஆர்வமாக இருக்கிறாள் என்று அவன் உணர்ந்தான்.

அவள் கிராமபோனைச் சுற்றிக்கொண்டிருந்ததால் அவளை முயன்று ஒரு நோட்டம் விட்டான்.

அவள் அங்கே பல மாதங்களாக அமர்ந்துகொண்டிருப்பதைப் போன்று தோன்றியது, வருடங்களாக இருக்கலாம் ஒருவேளை, அப்புறம் அந்த இடத்திலிருந்து நகர்ந்து செல்வதற்கு அவள் கிஞ்சித்து ஆர்வத்தையும் காட்டவில்லை.

அவள் கிராமபோனைச் சுற்றிக் கொண்டிருந்தாள் ஆனால் அவளது வாழ்வு அவனில் குவிந்திருந்தது. அவள் புன்னகைத்துக்கொண்டிருந்தாள்.

“நன்றி உங்களுக்கு” என்றான்  அவன், எழுவதற்கும் அவனது அசைவுகளில் கொஞ்சம் சௌகரியத்தையும் யதேச்சைத் தன்மையையும் கொடுப்பதற்கு முயன்றவாறு.

அவனைப் பார்த்துக்கொண்டிருப்பதில் இருந்து அந்தச் சிறுமி விலகவில்லை.

“அவர்கள் அவர்தம் தொப்பிகளைக் கொக்கிகளில் விட்டுச் செல்லவும் கூடச் செய்வார்கள்” என்று அவள் கூறினாள்.

இந்த முறை அவனது செவிகளில் ஓர் எரிச்சலை உணர்ந்தான். அவன் நடுங்கினான், விஷயங்களைப் பரிந்துரைக்கும் அவளது வழிமுறையைப் பற்றிஎண்ணியவாறு.

அசௌகரியமாக அடைபட்டுக் கொண்டு விட்டதைப்போன்று அவன் உணர்ந்தான், அப்புறம் தவறவிடப்பட்ட இரயிலைப் பற்றியபீதியை மீண்டும் உணர்ந்தான். ஆனால் அந்தக் கணத்தில் உடமையாளினி அறைக்குள் நுழைந்தான்.

“என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்” என்று அவள் வினவினாள்.

“அவர்கள் எல்லாம் செய்வதைப் போன்றே, தாழ்வாரத்திற்கு அவர் ஒரு நாற்காலியை இழுத்துச் சென்றுகொண்டிருக்கிறார்” என்று கூறினாள் சிறுமி.

அவளது வார்த்தைகளில் ஓர் ஏளனத்தின் தொனியை அவன் கண்டுகொண்டதாக எண்ணினான்.

“கவலை வேண்டாம்” என்றாள் உடைமையாளினி. “நான் உங்களுக்கு ஒரு ஸ்டூலினைக் கொண்டு வருகிறேன்.”

சிறுமி சிரிக்கவும் அவன் மனவுறுதி குலைந்ததாக உணர்ந்தான். அது உஷ்ணமாக இருந்தது.

ஒரு முறிவுபடாத, வறண்ட வெப்பம், அப்புறம் அவன் வியர்த்துக் கொண்டிருந்தான். உடமையாளினி தோல் இருக்கையுடன் இருந்த ஒரு மரஸ்டூலை தாழ்வாரத்திற்கு இழுத்து வந்தாள்.

சிறுமி மீண்டும் பேசத் தொடங்கும்போது அவளைப் பின்தொடர இருந்தான் அவன்.

“இதில் மோசமான விஷயம் என்னவென்றால் பறவைகள் இவரை அச்சுறுத்தும்” என்று கூறினாள்.

சிறுமியின் மீது உடைமையாளினி தனது கண்களைத் திருப்பியபோது உண்டான கடுத்தப் பார்வையை அவருக்குக் காண முடிந்தது.

அது ஒரு விரைவானதும் ஆனால் தீவிரமானதுமான பார்வையாக இருந்தது.

“நீ செய்யவேண்டியது அமைதியாக இருப்பதுதான்” என்று அவள் கூறினாள், அப்புறம் அவனை நோக்கி புன்னகையைத் திருப்பினாள்.

அப்புறம் அவனது தனிமை குறைந்ததைப் போன்று உணரவும் பேசுவதற்கான தூண்டுதலை பெறவும் செய்தான்.

‘அவள் கூறியதுதான் என்ன?’ என்று வினவினான்.

“அதாவது பகலின் இந்த வேளையில் தாழ்வாரத்தில் இறந்த பறவைகள் விழும்” என்று சிறுமி கூறினாள்.

“அவை அவளுடைய வெறும் எண்ணப்போக்குகள் மட்டுமே” என்றாள் உடைமையாளினி. அறைநடுவில் சிறுமேசையின் மீதிருந்த செயற்கை மலர்களின் ஒரு பூங்கொத்தை நேர்செய்வதற்காக அவள் குனிந்தாள்.

அவளது விரல்களில் பதட்டமான ஒரு வெட்டியிழுப்பு இருந்தது.

“எனது எண்ணப்போக்குகள், இல்லவே இல்லை” என்றாள் சிறுமி. “நீங்களே முந்தைய நாளுக்கு முன் தினம் அவற்றில் இரண்டை வாரி எடுத்தீர்கள். “

உடைமையாளினி அவளைக் கடுப்புடன் நோக்கினாள். சிறுமி ஒரு இரங்கத்தக்க முகபாவத்தை, அப்புறம் சந்தேகத்தின் இலேசான தடயம் கூட எஞ்சி இருக்காதவரைக்கும் அனைத்தையும் விளக்கும் வெளிப்படையான ஆர்வ வேட்கையையும் கொண்டு இருந்தாள்.

“என்ன நடந்துகொண்டிருக்கிறது என்றால், ஐயா, நேற்றைய முன் தினம் அவளைத் திகைக்க வைப்பதற்காகக் கூடத்தில் இரண்டு இறந்த பறவைகளைச் சில பையன்கள் வைத்தார்கள், அப்புறம் அவர்கள் கூறினார்கள் இறந்த பறவைகள் வானத்திலிருந்து வீழ்ந்துகொண்டிருந்ததாக.

சனங்கள் அவளிடம் சொல்லும் அனைத்தையும் அவள் விழுங்குகிறாள்.”

அவன் புன்னகைத்தான். விளக்கம் அவருக்கு மிகவும் வேடிக்கையாகத் தோன்றியது; அவன் தனது கைகளைத் தேய்த்துக் கொள்ளவும், அவனைக் கடும் மனவேதனையுடன் கவனித்துக்கொண்டிருந்த சிறுமியைக் காண்பதற்குத் திரும்பவும் செய்தான்.

கிராமபோன் இசைப்பதை நிறுத்திவிட்டிருந்தது. உடைமையாளினி வேறு அறைக்குச் சென்று விட்டிருந்தாள், அப்புறம் அவன் கூடத்தை நோக்கிச் சென்றபோது சிறுமி ஒரு தாழ்ந்த குரலில் வலியுறுத்தினாள்:

“அவை வீழ்வதை நான் பார்த்தேன். என்னை நம்புங்கள். எல்லோரும் அவற்றைக் கண்டார்கள்.”

அப்புறம் கிராமபோனுடனான அவளது பற்று தலையும், உடைமையாளினியின் கடுகடுப்பையும் அவன் புரிந்துகொண்டதாக நினைத்தான்.

“ஆம்” என்றான் அவன் பரிவிரக்கத்துடன். அதற்கு அப்புறம், கூடத்தை நோக்கி நகர்ந்தவாறு கூறினான்: ‘நானும் கூட அவற்றைக் கண்டிருக்கிறேன்.‘

வெளியே உஷ்ணம் குறைவாக இருந்தது, வாதுமை மரங்களின் நிழலில். கதவுச்சட்டத்திற்கு எதிராக ஸ்டூலைச் சாய்த்து வைத்துவிட்டு, தனது தலையைப் பின்னால் சாய்த்தான், அப்புறம் தனது அம்மாவைக் குறித்து நினைத்துப் பார்த்தான்: அவனது அம்மா, முற்றிலும் சோர்வுற்று, அவளது ஆடுநாற்காலியில், நீண்ட ஒரு விளக்குமாற்றை வைத்து கோழிகளை விரட்டியவாறு இருந்தாள், முதன் முறையாக அவன் வீட்டில் இல்லை என்பதை உணர்ந்தபோது.

ஒரு வாரத்திற்கு முன்பு, கடைசி உள்நாட்டு யுத்தத்தின்போது ஒரு மழைகோர்த்த விடியலில் நாட்டுப்புற பள்ளிவீட்டின் மண்ணும் நாணற் புல்லினாலும் ஆன நான்கு சுவர்களுக்கிடையே அவன் உலகிற்கு வந்த நாள் முதல் அந்த ஜூன்மாத காலை நேரத்தில் அவனது இருபத்து இரண்டாம் பிறந்தநாளன்று அவனுடைய அம்மா அவனது ஹேம் மக்கில் அவனை அணுகி ஒரு வாழ்த்து அட்டை உள்ள ஒரு தொப்பியைக் கொடுத்தது வரை நீண்டிருந்த, தனது வாழ்வானது ஒரு மெல்லிழைவான நேர்சரடாகும் என்று நினைத்திருப்பான்: ‘எனது அன்பு மகனுக்கு, அவனது நாளில்.’

சமயங்களில் அவன்  தனது செயலின்மையின் துருப் பிடித்த நிலையை உதறிவிட்டு பள்ளிக்கூடத்திற்காக ஏங்கினான், கரும்பலகைக்கும் ஈக்களின் எச்சத்தால் நெறிந்துகொண்டும் இருந்த நாட்டின் வரைபடத்திற்கும், அப்புறம் குழந்தைகளின் பெயர்களில் சுவர்களில் தொங்கிக்கொண்டிருந்த கோப்பைகளின் நீண்ட வரிசைக்காகவும் ஏங்கினான்.

அங்கே அத்தனை உஷ்ணமாக இருக்கவில்லை.  சாம்பல்நிறமான நீண்டகால்களை உடைய கோழிகள் கை கழுவும் நிலைச்சட்டத்திற்கு அடியில் முட்டைகள் இடுவதற்காகப் பள்ளிக்கூட அறைக்குள் நுழைந்த, அது ஒரு பசுமையான, சாந்தமிக்க நகரமாக இருந்தது.

அந்தக் காலத்தில் அவனது அம்மா ஒரு சோகமானவளும் சற்றே ஒதுங்கிய மனப்பான்மையுடைய பெண்மணியாக இருந்தாள்.

காப்பித் தோட்டங்களின் ஊடாக அப்பொழுது சற்றைக்கு முன்பாக வந்த காற்றை உட்கொள்வதற்காக அவள் அந்தியில் அமரவும், ‘மனௌரெ தான் உலகத்தில் மிக அழகான நகரம்,’ என்று கூறவும் செய்வாள்.

‘நீ வளர்ந்தவனாக ஆகும் போது புரிந்துகொள்வாய்.’

ஆனால் அவன் எதையும் புரிந்துகொள்ளவில்லை. அவனது வயதைவைத்துப் பார்க்கும்போது ஏற்கனவே மிகவும் உயரமாகவும் சோம்பல் கொண்டுவரும் அந்தத்துடுக்குத்தனம் மற்றும் அசட்டையான உடல்நலத்தின் திடீர் பாய்ச்சலில், பதினைந்து வயதிலும் அவன் புரிந்துகொள்ளவில்லை.

அவனது இருபதாம் பிறந்த நாள் வரையிலும் வாழ்வானது அவனது ஹேமக்கில் கிடக்கும்போது செய்யும் ஒரு சில இடமாற்றங்களே என்பதிலிருந்து அடிப்படையில் வேறுபட்டதாக இருந்திருக்கவில்லை.

ஆனால் இந்தச் சமயத்தில் அவனது அம்மா, கீல்வாதத்தால் கட்டுப்படுத்தப்பட்டு, பதினெட்டுவருடங்களாக அவள் பணியாற்றிய பள்ளியிலிருந்து விலகினாள், அதன் காரணமாக அவர்கள், பள்ளிக்கூட அறையில் கடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததைப் போன்ற சாம்பல்நிற கால்களை உடைய கோழிகளை அவர்கள் வளர்த்த, ஒரு மிகப்பெரிய உள்முற்றம் இருந்த இரண்டு - அறை வீட்டில் குடியேறினார்கள்.

கோழிகளைப் பேணுவதுதான் யதார்த்தத்துடனான அவனது முதன் தொடர்பாடலாக இருந்தது. அவனது அம்மா அவளது பணி ஓய்வினைக் குறித்தும் அதற்கு மனுக் கொடுப்பதை மேற்கொள்வதற்காக அவளது மகனை அறிவுக்கூர்மை வாய்ந்தவனாகவும் எண்ணிய, ஜூலை மாதம் வரை அது மட்டும் ஒரேயொன்றாக இருந்தது.

ஆவணங்களைத் தயார் செய்வதற்காக ஒரு செயலூக்கமுள்ள வழியில் அவன் ஒத்துழைத்தான், அப்புறம் இன்னும் அவள் பணி ஓய்வு பெறும் அளவிற்கு வயதாகிவிட்டிருக்கவில்லை என்பதால் அவளுடைய தீக்கை சான்றிதழை ஆறு மாதங்கள் மாற்றுவதற்காக வட்டார சமயகுருவினை சம்மதிக்கச் செய்வதற்கான சாமர்த்தியத்தையும் கூடக்கொண்டிருந்தான்.

அவனது அம்மாவின் கல்வி கற்பிக்கும் அனுபவத்தை வழுவாமல் விவரித்த, அவனது இறுதியான வழிகாட்டல்களை வியாழக் கிழமை அன்று பெறவும், பன்னிரண்டு பெசோக்கள், மாற்றுவதற்கான ஓர் உடுப்பு, ஆவணங்களின் ஒரு கோப்பு மற்றும் அவனுக்கு ஒரு பன்றிப் பண்ணையைத் அமைத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசாங்கம் அவனுக்குக் கட்டாயம் கொடுக்கும் ஒரு விஷயம் என்று அவன் விளங்கிக்கொண்டிருந்த, ‘பணி ஓய்வு’ என்ற வார்த்தையைப் பற்றிய முற்றிலும் வளர்ச்சியற்ற ஓர்எண்ணத்துடன் நகரத்திற்கான பயணத்தைத் தொடங்கினான்.

புழுக்கமான சூட்டினால் மந்தமாகி, விடுதித்  தாழ்வாரத்தில் லேசாக மயங்கியவாறு, அவனதுநிலைமையின் தீவிரத்தைப் பற்றிச் சிந்திப்பதை அவன் நிறுத்தவில்லை.

எதிர்பாரா இடையூறானது அடுத்து வரும் நாளில், இரயில் திரும்பிவரும்போது சரியாகிவிடும் என்று கருதிக்கொண்டான், ஆகையால் இப்பொழுது அவனது ஒரே கவலை ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருப்பதும் தாங்கவொண்ணா அளவுக்கு வெப்பத்துடன் இருந்த இந்த நகரத்தை என்றென்றைக்குமாக மறந்துவிடுவதும் ஆகும்.

நாலுமணிக்கு சிறிது நேரம் முன்பாக, மகிழ்ச்சியற்றதும் மந்தமானதுமான உறக்கத்தில் ஆழ்ந்தான், அவனது ஹேம்மக்கைக் கொண்டுவராதது ஓர் அவமானம் என்று உறங்கும்போது எண்ணியவாறு. அப்புறம்தான் அவன் அனைத்தையும் உணர்ந்தான், துணிகளின் மூட்டையையும் பணி ஓய்வுக்கான ஆவணங்களையும் இரயிலில் மறந்துவிட்டிருந்தான் என்பதை உணர்ந்தான்.

திடுக்கிடலுடன் விழித்தெழுந்தான், அச்சமுற்று, அவனது அம்மாவைக் குறித்துச் சிந்தித்துக்கொண்டிருந்தான், அப்புறம் பீதியினால் மீண்டும் நெரிக்கப்பட்டான்.

அவனது இருக்கையைத் திரும்பி உணவறைக்குஇழுத்து வந்தபோது, நகரத்தில் விளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டிருந்தன.

அவன் ஒருபோதும் மின்சார விளக்குகளைக் கண்டிருக்கவில்லை, ஆகையால் விடுதியின் புள்ளிகள் நிறைந்த எளியகுமிழ் விளக்குகளை கண்டபோது மிகவும் ஈர்ப்புக்கு உள்ளானான்.

அவனது அம்மா அவற்றைப்பற்றி அவனிடம் பேசியிருந்தாள் என்பதைப் பிறகுஅவன் நினைவுகூர்ந்தான், அப்புறம் துப்பாக்கிக் குண்டுகளைப் போன்று கண்ணாடிகளின் மீதுமோதிக்கொண்டிருந்த பெரிய ஈக்களைத் தட்டிவிடு வதற்கு முயன்றவாறு, உணவறையை நோக்கி இருக்கையை இழுப்பதைத் தொடர்ந்தான்.

அவனது நிலைமையின் தெளிவான அத்தாட்சியினால் குழம்பியவாறு, கடுமையான வெப்பத்தில், அவனதுவாழ்வில் முதன்முறையாக அவன் அனுபவித்துக் கொண்டிருக்கும் தனிமையின் கொடுமையினால், பசியின்றியே உணவு கழித்தான்.

ஒன்பது மணிக்குப்பிறகு வீட்டின் பின்புறம் உள்ள, செய்தித் தாள்களினாலும் சஞ்சிகைகளினாலும் ஒட்டப்பட்டுஇருந்த ஒரு மரத்தாலான அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.

நள்ளிரவில், ஐந்து கட்டிடத் தொகுதிகளுக்கு அப்புறம், பலிபீடத்தின் புனித சமயச் சடங்குமுறையைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல், தனது கட்டிலில் முகங்குப்புற படுத்தவாறு, காலை ஏழு மணிக்கு அவர் தயாராக்கியிருந்த திருச்சபை பிரசங்கத்தைச் சாயுங்காலத்தின் அனுபவங்கள் வலிமையூட்டின என்று எண்ணிக்கொண்டிருந்தபோது, அவன் ஒரு நச்சாவி கிளம்பும் மற்றும் சுரம் பிடித்ததுமான உறக்கத்தில் முழ்கியிருந்தான்.

பன்னிரண்டு மணிக்குசிறிது முன்பாக அவர் பெண் ஒருத்திக்கு ஒரு கடைசியான திருமுழுக்காட்டு செய்வதற்காக நகரத்தைக் கடந்து சென்றிருந்தார், அப்புறம் அவர் கிளர்வுற்றதாகவும் பதற்றமாகவும் உணர்ந்தார், அதன் விளைவாக அவரது கட்டிலின் அடுத்ததாகப் புனித பலிபூசைக்குரிய சாதனங்களை வைக்கவும் தனது திருச்சபை பிரசங்கத்தை நிகழ்த்தச் செல்வதற்காகப் படுத்துக் கிடக்கவும் செய்தார்.

பல மணிநேரங்களுக்கு அவர் அவ்வாறே இருந்தார், விடியலில் ஓர் உப்புக்கொத்திப் பறவையின் தொலைதூர அழைப்பை அவர் கேட்கும் வரையிலும் கட்டிலில் முகங்குப்புற கிடந்தார்.

அப்புறம் அவர் எழுவதற்கு முயன்றார், வலிமிகுந்து எழுந்து அமர்ந்தார், சிறுமணியின் மேல் மிதித்தார், அப்புறம் அவரது அறையின் குளிர்ந்த, கடினமான தரையில் தலைகுப்புற விழுந்தார்.

அவரது பக்கவாட்டில் எழுந்த ஒரு நடுக்கத்தை அவர் உணர்ந்தபோது அவர் சுயநினைவை மீண்டும் பெற்றிருக்கவில்லை.

அந்தக் கணத்தில் அவரதுமொத்த எடையைப் பற்றிய உணர்வு அவருக்குஏற்பட்டது: அவரது உடலின் எடை, அவரதுபாவங்கள், அப்புறம் அவரது வயது ஆகியஅனைத்தினைக் குறித்தும்.

அவரது பிரசங்கங்களைத் தயாரித்துக்கொண்டிருந்த போது அடிக்கடி நரகத்திற்கு அழைத்துச் செல்லும் பாதையைப் பற்றிய ஒரு துல்லியமான கருத்தை உருவாக்குவதற்கு அவருக்கு உதவிய கல் தரையின் கடினத்தன்மையை அவரது கன்னத்தில் உணர்ந்தார்.

‘கர்த்தாவே’ என்று அவர் முணுமுணுத்தார், பயந்து போனார்; அப்புறம் நினைத்தார், நான் ஒருபோதும் இனிமேல் எழுந்து நிற்கப்போவதில்லை என்று.

எதைப் பற்றியும் யோசிக்காமலும், ஒரு நல்லசாவுக்காகப் பிரார்த்தனை செய்வதற்கும் கூட நினைவின்றியும், தரையில் நெடுஞ்சாண் கிடையாக எத்தனை நேரம் கிடந்தார் என்பதை அவர் அறியவில்லை.

அது, உண்மையில், அவர் ஒரு நிமிடநேரத்திற்கு இறந்துபோனது போன்று இருந்தது. கதவின் அடியில் பிரகாசமான கதிரொளியைக் கண்டார்; தொலைவாகவும் துயரம் நிறைந்ததாகவும் இருந்த, சேவல்களின் கரகரப்பான இரைச்சலை அவர் கேட்டார், அப்புறம்தான் உணர்ந்தார் அவர் உயிருடன் இருக்கிறார் என்றும் அவரது திருச்சபை பிரசங்கத்தின் வாக்குகளை மிகத் துல்லியமாக நினைவில் கொண்டிருக்கிறார் என்றும்.

கதவின் தாழ்ப்பாள் கட்டையை அவர் பின்னால் இழுத்தபோது, விடியல் புலர்ந்துகொண்டிருந்தது.

வேதனை உணர்வு அவருக்கு நின்றுவிட்டது, அப்புறம் அவரது அடியானது அவரது வயோதிகச் சுமையிலிருந்து அவரை அகற்றிவிட்டதாகக் கூடத் தோன்றியது. சேவல்கள் மொத்தம் நிறைந்திருந்த ஒரு துயரார்ந்த ஈரலிப்பான அந்தக் காற்றின் முதல் சுவாசத்தை அவர் வாய் நிறைய விழுங்கியபோது, நன்மைகள் அனைத்தும், ஒழுக்கக்கேடும், நகரத்தின் துயரங்களும் அவரது இதயத்தைத் துளைத்ததாகத் தோன்றியது.

அப்புறம் அவர் தன்னைச் சுற்றிக் கண்ணோட்டினார், தனிமையுடன் தன்னை இணக்கப் படுத்திக்கொள்வதைப் போன்று, அப்புறம் விடியலின் அந்தச் சாந்தமான நிழலில், தாழ்வாரத்தில், ஒன்று, இரண்டு, மூன்று இறந்த பறவைகளைக் கண்டார்.

இந்த மூன்று பறவைகளின் கூட்டு மரணமும், அவரது தயாரிக்கப்பட்ட திருச்சபை பிரசங்க உரைக்கு ஏற்ப, சில பரிகாரத்தை வேண்டுகிறது என்று எண்ணியவாறு, ஒன்பது நிமிடங்களுக்கு மூன்று உடல்களையும் அவர் கூர்ந்து ஆராய்ந்தார்.

அப்புறம் அவர் தாழ்வாரத்தின் மற்ற மூலைக்கு நடந்து சென்று, மூன்று இறந்த பறவைகளையும் எடுத்துக்கொண்டு தண்ணீர் ஜாடிக்குத் திரும்பினார், பச்சையாக அசையாது இருந்த தண்ணீருக்குள், ஒன்றை அடுத்து ஒன்றாகப் பறவைகளை எறிந்தார், அந்தச் செயல்பாட்டின் நோக்கத்தைச் சரியாக அறியாமலேயே.

மூன்றும் மூன்றும் அரை டஜன், ஒரு வாரத்தில், என்று அவர் எண்ணினார், அப்புறம் துலக்கத்தின் ஓர் அற்புதகரமான மின்வெட்டொளி அவரது வாழ்வின் மகத்தான நாளை அவர் அனுபவிக்கத் தொடங்கிவிட்டிருக்கிறார் என்று அவரிடம் கூறியது.

ஏழு மணிக்கு வெப்பம் தொடங்கியது. விடுதியில், ஒரேயொரு விருந்தினன் காலை உணவிற்காகக் காத்துக்கொண்டிருந்தான். கிராமபோன் சிறுமி இன்னும் விழித்தெழுந்திருக்கவில்லை.

உடமையாளினி நெருங்கினாள், அப்புறம் அந்தக் கணத்தில் கடிகார மணியின் ஏழு மணி அடிப்பொலிகள் அவளது புடைத்திருந்த வயிற்றிற்குள் ஒலித்துக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றியது.

‘ஆக நீ இரயிலைத் தவறவிட்டுவிட்டாய்,‘ என்று அவள் ஒரு காலங்கடந்த பரிவிரக்கத்தின் தொனியில் கூறினாள். அதன் பிறகு அவள் காலை உணவை கொணர்ந்தாள்: காப்பிப் பாலுடன், ஒரு பொறித்த முட்டை, அப்புறம் வாழைக்காயின் சீவற்துண்டுகள்.

அவன் உண்பதற்கு முயன்றான், ஆனால் அவனுக்குப் பசியில்லை. வெப்பம் வந்துவிட்டது என்பதைப் பற்றிய எச்சரிக்கையுடன் இருந்தான் அவன்.

குடம் குடமாக வியர்த்துக்கொண்டிருந்தான். மூச்சுத் திணறிக்கொண்டிருந்தான். அவனது உடைகளை அணிந்தவாறே, மிகச்சிறிதளவே உறங்கியிருந்தான், அப்புறம் இப்போது சிறிதளவு காய்ச்சலையும் கொண்டிருக்கிறான்.

அவன் மீண்டும் பீதியை உணர்ந்தான், அப்புறம் மிகப்பெரும் பச்சை மலர்களுடைய அவளது புதிய ஆடையில் பளீரென்று, உடமையாளினி உணவுப் பாத்திரங்களை எடுப்பதற்காக மேசைக்கு வந்தபோது அவனது அம்மாவை நினைவு கூர்ந்தான்.

உடமையாளினியின் ஆடை அதுஞாயிற்றுக்கிழமை என்று அவனுக்கு நினைவுபடுத்தியது.

‘திருப்பலி பூசை ஏதாவது இருக்கிறதா?’ என்று வினவினான்.

‘ஆம், இருக்கிறது’, என்று கூறினாள் பெண். ‘ஆனால் அது இல்லாததைப் போன்றுதான், ஏனென்றால் கிட்டத்தட்ட எவரொருவரும் போவதில்லை.

உண்மை என்னவென்றால் ஒரு புதிய துறவியை எங்களுக்கு அனுப்புவதற்கு அவர்கள் விரும்பாததால்.’

‘அப்புறம் இவருக்கு என்ன குறை?’

‘இவருக்குக் கிட்டத்தட்ட நூறு வயது, அப்புறம் அவர் அரைப்பைத்தியம்,’ என்று கூறினாள் பெண்;அசைவற்று நின்றாள் அவள், சிந்தனையில் மூழ்கிய வாறு, அனைத்துப் பாத்திரங்களையும் ஒரு கையில் தாங்கிக்கொண்டு.

அதன் பிறகு அவள் கூறினாள், ‘வேறு ஒரு நாள், தீய ஆவியை அவர் கண்டார் என்று திருச்சபை பிரசங்கமேடையில் இருந்து அவர் சத்தியம் செய்தார், அப்புறம் அதன் பின்னர் எவர் ஒருவரும் திருப்பலி பூசைக்குச் செல்வதில்லை.’

ஆகையால் அவன் தேவாலயத்திற்குச் சென்றான், பாதி நம்பிக்கையிழந்த நிலையினாலும் பாதி ஒரு நூறு வருடங்கள் வயதான ஒரு நபரைக் காணும் ஆர்வத்திலும்.

அது முடிவுறாத புழுதிபடிந்த தெருக் களும் ஆள்குடியிருப்பு அற்றதாகத் தோன்றும் துத்த நாகக் கூரைகளை உடைய அடர்ந்த மரத்தாலான வீடுகளும் உடைய, மரித்துப்போன நகரம் என்பதை அவன் கவனித்தான்.

ஞாயிற்றுக்கிழமையின் போது இருந்த நகரமாகும் அது: புற்களற்ற தெருக்கள், திரைச் சீலைகளற்ற வீடுகள், அப்புறம் திணறடிக்கும் வெப்பத்தின் மீதிருக்கும் ஓர் அடர்ந்த, அற்புதகரமான வானம்.

ஞாயிற்றுக் கிழமையை வேறு எந்தவொரு நாளிலிருந்தும் வேறுபடுத்துவதற்கு அனுமதிக்கும் எந்தவொரு அடையாளமும் இல்லை என்று அவன் எண்ணினான், அப்புறம் ஆளற்ற தெருவினூடாக அவன் நடந்தபோது அவனது அம்மாவை நினைவு கூர்ந்தான்: ‘ஒவ்வொரு நகரத்திலுள்ள அனைத்து தெருக்களும் தேவாலயத்திற்கோ அல்லது கல்லறைமயானத்திற்கோ தவிர்க்கவியலாமல் இட்டுச் செல்லும்.’ அந்தக் கணத்தில் அவன் ஒரு கோபுரத்தையும் அதன் உச்சியில் மரத்தாலான ஒரு காற்றுத் திசைகாட்டியையும், பத்து மணி கழிந்து நான்கு நிமிடங்களில் நின்றுவிட்டிருந்த ஒரு கடிகாரத்தையும் கொண்டிருந்த வெள்ளையடிக்கப்பட்ட கட்டிடத்துடன் இருந்த உருளைக்கல் பாவப்பட்ட ஒரு சிறு சதுக்கத்திற்கு வந்தடைந்தான்.

அவசரமின்றி அவன் சதுக்கத்தைக் கடந்து, திருக்கோயில் மோடிட்ட வாயில் முகப்பின் மூன்று படிகளில் ஏறினான், அப்புறம் உடனடியாகச் சாம்பிராணியின் வாடையுடன் கலந்திருக்கும் வயதான மனித வியர்வையின் வாடையை முகர்ந்தான், அப்புறம் கிட்டத்தட்ட காலியாக இருந்த தேவாலயத்தின் வெதுவெதுப்பான நிழலுக்குள் சென்றான்.

பலிபீடத்தின் புனித சமயசடங்குமுறை பிரிவைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல் அப்பொழுதுதான் திருச்சபை பிரசங்கமேடையில் ஏறியிருந்தார்.

அவனது தொப்பியை அணிந்தவாறு பையன் ஒருவன் நுழைவதை திருச்சபை பிரசங்கத்தைத் தொடங்கவிருந்த போதுதான் கண்டார்.

அவனது பெரிய, சாந்தமான, அப்புறம் தெளிவான கண்களை உடைய கிட்டத்தட்ட வெறுமையாக இருந்த நெற்றியை ஆராய்ந்தபடி அவனை அவர் கண்டார்.

அவனது தலையை ஒரு புறமாகவும் அவனது கைகளை முழங்கால்களிலும் வைத்துக்கொண்டு, திருக்கோயிலின் கடைசி வரிசை இருக்கையில் அமர்வதை அவர் கண்டார்.

இந்த நகரத்தில் அவன் ஓர் அந்நியன் என்று அவர் கண்டுகொண்டார்.

இந்நகரத்தில் அவர் முப்பது வருடங்களாக இருந்து வருகிறார், அப்புறம் அதன் எந்தவொரு குடியிருப்பாளர்களையும் அவனது வாடையினால் மட்டுமே அவருக்கு இனம் கண்டுகொண்டிருந்திருக்க முடியும்.

ஆகையால் அப்பொழுதுதான் வந்தடைந்திருந்த அந்தப் பையன் ஓர் அந்நியன் என்று அவர் அறிந்தார்.

ஒரு தீவிரமான, சுருக்கமான நோட்டத் தில், அவன் ஓர் அமைதியான ஆன்மா என்று அவர் கண்டறிந்தார், அப்புறம் சிறிதளவு சோகமுடையவனாகவும், உடைகள் அழுக்காகவும் சுருக்கம் விழுந்தும் இருக்கின்றன என்றும்.

அதாவது அவற்றை அணிந்துகொண்டு உறங்கியவாறே அவன் நீண்டகாலத்தைச் செலவிட்டான் என்பதைப் போன்று, அதனை அவர் அதீத வெறுப்பும் இரக்கமும் சேர்ந்து கலந்த ஓர் உணர்வுடன் எண்ணினார்.

ஆனால் அப்புறம், திருக்கோயில் நாற்காலி வரிசையில் அவன் அமர்ந்திருப்பதைக் காணும்போது, அவரது இருதயம் நன்றியுணர்வினால் பெருகி வழிந்தது, அப்புறம் அவர்அவரது வாழ்வின் மகத்தான திருச்சபைப் பிரசங் கத்தை அளிப்பதற்குத் தயாரானார்.

கர்த்தாவே, நான் அவனை இக்கோயிலில் இருந்து வெளியே எறியவேண்டியதில்லை என்பதற்காகத் தயைக் கூர்ந்து அவனுடைய தொப்பியை கழற்றுவதற்கு அவனுக்கு நினைவுபடுத்துங்கள் என்று அதேசமயத்தில் அவர் நினைத்தார்.

அப்புறம் தனது திருச்சபை பிரசங்கத்தைத் தொடங்கினார்.

தொடக்கத்தில் அவர் என்ன சொல்லிக்கொண்டிருந்தார் என்பதை உணராமலேயே அவர் பேசினார்.அவர் தனக்கே கூடச் செவிகொடுக்கவில்லை.

உலகத்தின் தொடக்கம் தொட்டு அவரது ஆன்மாவில் ஒடுங்கியிருந்த ஒரு வசந்தத்திலிருந்து பாய்ந்தொழுகிய தெளிவானதும் சரளமானதுமான மெல்லிசையை அவர் கேட்கவே இல்லை.

அவரது வாக்குகளானவை, எதிர்பார்க்கப்பட்ட வரிசையிலும் இடத்திலும் மிகத் துல்லியமாகவும், பொருத்தமாகவும், மிகநுட்பமாக வும் முன்னால் பாய்ந்தொழுகியதாக ஐயுறவிலா உண்மையை அவர் குழப்பிக்கொண்டார்.

ஒரு வெதுவெதுப்பான ஆவி அவரது உள்ளிடங்களை அழுத்துவதாக அவர் உணர்ந்தார். ஆனால் அவரது ஆன்மாவானது வீண் தற்பெருமையற்றது என்பதை அவர் அறிந்திருந்தார், அப்புறம் அவரது உணர்ச்சிகளை முடமாக்கிய அந்த மனமகிழ்வின் உணர்ச்சியானது செருக்கோ கீழ்ப்படியாமையோ அல்லது வீண் தற்பெருமையோ அல்ல, மாறாக, நமது கர்த்தாவின் பாலான அவரது மெய்க்கருத்தின் தூய மகிழ்ச்சி கொண்டாட்டமாகும்.

ஒரு சில கணங்களில் வெப்பமானது மிக மோச மானதாக ஆகும் என்பதை அறிந்தவாறு, அவளது படுக்கையறையில், ரெபெக்கா மயக்கத்தை உணர்ந்தாள். புதுமைத்திறத்தின் ஒரு விளங்காத அச்சத்தினால் இந்நகரத்துடன் நிலைகொண்டிருப்பதாக அவள் உணர்ந்திருக்கவில்லை என்றால், அவளது துண்டு துணுக்குகளை அந்துருண்டைகள் உடையடிரங்குப்பெட்டியில் இட்டுக் கொண்டு வேறோர் வாழுலகை நோக்கிச் சென்றிருப்பாள், அவளது பூட்டனார் செய்தததைப் போன்று, அப்படித்தான் அவளிடம் சொல்லப்பட்டது.

ஆனால் அந்நகரத்தில், முடிவற்ற தாழ்வாரங்களுக்கும், வெப்பமானது நின்றுபோகும்போது திரைச்சீலைகளை ஒளியூடுருவும் கண்ணாடியை வைத்து அவர் மாற்றியிருக்கக்கூடிய ஒன்பது படுக்கையறைகளுக்குமிடையே மரிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்தாள் என்பதை உள்ளூர உணர்ந் திருந்தாள்.

அவள் அங்கேயே தங்கியிருப்பாள், என்று தீர்மானித்தாள் (அவள் தனது ஆடைகளைத் துணிமணிகளை வைக்கும் உள்ளறை நிலையடுக்கில் அடுக்கியபோது எப்போதும் எடுத்த ஒரு தீர்மானமாக அது இருந்தது), அப்புறம் ஓர் இளந்துறவியை அவர்களுக்கு அனுப்பிக் கொடுப்பதற்காக ‘எனது ஒப்புயர்வற்ற ஒன்றுவிட்ட உடன்பிறந்தாருக்கு’க் கடிதம் எழுதுவதற்கும் கூடத் தீர்மானித்தாள், ஆகையால் அவளுக்குச் சின்னஞ்சிறு வெல்வெட் மலர்கள் உள்ளதனது தொப்பியை அணிந்தவாறு மீண்டும் தேவாலயத்திற்கு வர முடியவும், ஒத்திசை வான திருப்பலி பூசையையும் பொருத்தமானதும் சமயத்தில் பற்றுறுதிக் கொள்ளச் செய்வதாகவும் இருக்கும் திருச்சபைப் பிரசங்கங்களை மீண்டும் கேட்கவும் முடியும். நாளை திங்கட்கிழமை, அவள் நினைத்தாள், அர்ஹேனீதா திடீரென்று திரைச்சீலை இடப்பட்டிருந்த கதவைத் திறந்து கத்தியபோது, மேற்றிராணியாருக்கான கடிதத்தின் முகமன்வாழ்த்தைக் குறித்துக் கட்டக்கடைசியாகச் சிந்திப்பதற்குத் தொடங்கியிருந்தாள் (அற்பமானதும் மரியாதைக் குறைவானதும் என்று கர்னல் புயெந்தியா அழைத்திருந்த ஒரு முகமன் வாழ்த்து):

‘சென்யோரா, சனங்கள் சொல்கிறார்கள் தந்தை திருச்சபை பிரசங்கமேடையிலிருந்து பைத்தியமானார் என்று!’

விதவை கதவை நோக்கி ஒரு குறிப்பிட்ட வகையில் வாடிச் சுருங்கியிருக்காததும் கடுமையானதுமான முகத்தைத் திருப்பினாள்.

‘கிட்டத்தட்ட அவர் ஐந்து வருடங்களாகப் பைத்தியமாக இருக்கிறார்,‘ என்று கூறினாள். அப்புறம் அவள் தனது துணிமணிகளை ஒழுங்குபடுத்தி வைப்பதைத் தொடர்ந்து செய்தவாறு, கூறினாள்:

‘தீய ஆவியை அவர் மீண்டும் பார்த்திருக்க வேண்டும்.’

‘இம்முறை தீய ஆவியை அல்ல.’ என்றாள் அர்ஹேனீதா.

‘பிறகு யாரை?’ என்று ரெபெக்கா வினவினாள், முறை பிசகாமலும் அலட்சியமாகவும்.

‘இப்போது அவர் சொல்கிறார் அலைந்து திரியும் யூதனை அவர் கண்டதாக.’

அவளது தோல் நெளிவதாக உணர்ந்தாள் விதவை.

அவளது கிழிந்த திரைச்சீலைகளை, வெப்பத்தை, இறந்த பறவைகளை, அப்புறம் கொள்ளைநோய் ஆகியவற்றை அவளுக்குப் பிரித்தறியாமல் இருந்ததற்கு இடையில், அவளது தொலைவான சிறுபிராயத் தின் மத்தியானங்களுக்கு அப்புறம் அவள் நினைவு கொண்டிராத அந்த வார்த்தைகளை அவள் கேட்ட போது, குழப்படியான எண்ணங்களின் ஒரு பல்திறம்அவளது தலை வழியாகக் கடந்துசென்றது: ‘அலைந்து திரியும் யூதன்.’ அப்புறம் அவள் நகரத் தொடங்கினாள், சீற்றமடைந்து, பனிக்கட்டியாக உறைந்தவாறு, அர்ஹேனீதா வாய்பிளந்து அவளை நோக்கிக்கொண்டிருந்த இடத்தை நோக்கி.

‘அது உண்மைதான், என்றாள் ரெபெக்கா’ அவளது இருத்தலின் அடியாழங்களிலிருந்து எழுந்து வந்த ஒரு குரலில். ‘இப்போது எனக்குப் புரிகிறது பறவைகள் ஏன் மரிக்கின்றன என்று.’

பேரச்சத்தினால் உந்தப்பட்டு, அவள் தன்னை ஒரு கருப்பு பூத்தையல் செய்யப்பட்ட சால்வையை வைத்து மூடிக்கொண்டு, மின்னற்பொழுதில், நீண்ட இடைநாழியையும் அலங்காரப் பொருட்களால் திணிக்கப்பட்டிருந்த வசிப்பறையையும், அப்புறம் வாயிற்கதவையும், பலிபீடத்தைச் சேர்ந்த தந்தை ஆந்தனி இசபெல், மருரூபம் கொண்டும் ‘நான் அவனைக் கண்டேன் என்று சத்தியம் செய்கிறேன் உங்களிடம்.

இன்று காலை தச்சனான யோனாசின் மனைவிக்குக் கடைசியான திருமுழுக்காட்டைச் செய்துவிட்டு நான் திரும்பி வந்துகொண்டிருந்தபோது அவன் என் பாதையில் கடந்து சென்றான் என்று நான் உங்களிடம் சத்தியம் செய்கிறேன்.

அவனது முகமானது கர்த்தாவின் சாபத்தினால் கறுத்திருந்தது என்றும், அவனது நீத்தார் கண்விழிப்பில் எரியும் கங்குகளின் ஒரு தடத்தை அவன் விட்டுச் சென்றான்’ என்றும் கூறிக்கொண்டிருந்த தேவாலயத்திற்குச் செல்லும் இரண்டு கட்டிடத் தொகுதிகளையும் கடந்தாள்.

அவரது திருச்சபை பிரசங்கம் நின்றுபோனது, அந்தரத்தில் மிதந்தவாறு.

தனது கைகளின் நடுக்கத்தை அவருக்குக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை அவர் உணர்ந்தார், அதாவது அவரது உடல் மொத்தமும் குலுங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும், அப்புறம் ஒரு உறைபனிக் குளிரான வியர்வையின் நூலிழை மெதுவாக அவரது முதுகுத்தண்டில் கீழிறங்கிக் கொண்டிருந்தது என்பதையும்.

அவர் நோவுற்றதாக உணர்ந்தார், நடுக்கத்தை உணர்ந்தவாறு, அப்புறம் தாகத்தையும், அப்புறம் தனது குடலில் ஒரு வன்மையான முறுக்கலையும், அப்புறம் அவரது அடிவயிற்றில் ஓர் ஆர்கன் குழாயின் அதிர் சுரத்தைப் போன்று எதிரொலித்த ஓர் இரைச்சலையும். அப்புறம் அவர் உண்மையை உணர்ந்துகொண்டார்.

தேவாலயத்தில் சனங்கள் இருந்தார்கள் என்பதைக் கண்டுகொண்டார், அப்புறம் அந்த ரெபெக்கா, இரங்கத்தக்க விதமாக, பகட்டாகக் காட்டிக்கொண்டு, அவளது கைகளை விரித்தவாறு, அப்புறம் கடுமையான, வாலுலகங்களை நோக்கித் திரும்பிய உறைந்த முகத்துடன், தேவாலயத்தின் நடுப்பகுதியில் முன்னேறி வருவதைக் கண்டார்.

என்ன நடந்துகொண்டிருந்தது என்பதை அவர்குழப்பமாகப் புரிந்துகொண்டார், அவர் ஓர் அற்புதத்தைக் கண்டுகொண்டிருந்தார் என்பதை நம்புவதற்கு வீண்தற்பெருமையாக இருக்கும் என்பதை அவர் புரிந்துகொள்ளும் அளவிற்குப் போதுமான தெளிவுடன் இருந்தார்.

தாழ்மையுடன் தனதுநடுங்கும் கரங்களைத் திருச்சபை பிரசங்க மேடையின் மரவிளிம்பில் வைத்துக்கொண்டு தனது பேச்சைத் தொடர்ந்தார்.

‘அப்புறம் அவன் என்னை நோக்கி நடந்துவந்தான்,’ என்றார் அவர். அப்புறம் இந்தத் தடவை அவர் நம்பவைப்பதாகவும் உணர்ச்சியூட்டுவதாகவும் இருந்த தனது சொந்தக் குரலைக் கேட்டார்.

அவன் என்னை நோக்கி நடந்து வந்தான், அப்புறம் அவன் மரகதக் கண்களையும் பரட்டையான தலை முடியையும், வெள்ளாட்டுக்கிடாவின் மணத்தையும் கொண்டிருந்தான்.

அப்புறம் நமது கர்த்தாவின் பெயரால் அவனைப் பழித்துரைப்பதற்காக என் கையை உயர்த்தி, அப்புறம் அவனிடம் கூறினேன்: “நில், ஓர் ஆட்டுக்குட்டியைப் பலியிடுவதற்கான நன்னாளாக ஒரு போதும் ஞாயிற்றுக்கிழமை இருந்ததில்லை.”

அவர் முடித்தபோது, வெப்பம் வந்துவிட்டிருந்தது.

அந்தத் தீவிரமான, கடினத்தன்மையான, அந்த மறக்க முடியாத ஆகஸ்டின் எரியும் வெப்பம்.

ஆனால் தந்தை இசபெல் ஆந்தனி இனிமேலும் வெப்பத்தைப் பற்றி அக்கறை கொண்டவராக இல்லை. அவர் அறிந்திருந்தார், அவரது முதுகிற்குப் பின்புறம், நகரமானது மீண்டும் பணிவுடன் இருந்தது என்று, அவரது திருச்சபை பிரசங்கத்தினால் பேச்சற்று, ஆனால் அவர் அதனால் கூட மகிழ்ச்சியடையவில்லை.

அவரது பாழ்பட்ட தொண்டைக்கு ஒயினானது இதமளிக்கும் என்ற உடனடியான எதிர்ப்பார்ப்பினாலும் கூடஅவர் மகிழ்ச்சியடையவில்லை.

அவர் அசௌகரியமாகவும் இடம் மாறி வந்தவராகவும் உணர்ந்தார். அவர் கவனம் சிதறியதாகவும் தியாகத்தின் உச்ச கணத்தில் மனதை ஒருமுகப்படுத்த முடியாதவர் ஆகவும் உணர்ந்தார்.

கொஞ்சகாலமாகவே இதே விஷயம் அவருக்கு நிகழ்ந்து கொண்டிருந்தது, ஆனால் தற்போது இது வேறுவகையான கவனச்சிதறலாக இருந்தது, ஏனென்றால் அவரது எண்ணங்கள் ஓர்உறுதி செய்யப்பட்ட மன உளைவினால் நிறைக்கப்பட்டிருந்தன.

பிறகு அவரது வாழ்க்கையில் முதன் முறையாக, அவர் கௌரவத்தை உணர்ந்தார். அப்புறம் அவர் கற்பனைசெய்திருந்ததையும் அவரது திருச்சபை பிரசங்கங் களிலும் வரையறுத்திருந்ததை அப்படிப் போலவே, தாகத்தைப் போன்று கௌரவமும் ஒர் உந்துதலே என்று உணர்ந்தார்.

நற்கருணைப் பேழையை ஊக்கத்துடன்  அடைத்துவிட்டு அவர் கூறினார்:

‘பித்தகோரஸ்.’

மொட்டையடிக்கப்பட்டதும் பளபளப்பானதுமான தலையை உடைய ஒரு குழந்தையான, தந்தை ஆந்தனி இசபெல்லின் ஞானப்புதல்வனான, அவர் அவனுக்குப் பெயரிட்டிருந்தவனுமான, திருக்கோயில் ஏவலன், பலிபீடத்தை நோக்கி வந்தான்.

‘காணிக்கைகளை எடுத்துக்கொள்,’ என்றார் துறவி. குழந்தை முழித்தான், முற்றிலுமாகச் சுற்றித்திரும்பி விட்டு, அதன்பிறகு கிட்டத்தட்ட கேட்க முடியாததொரு குரலில் சொன்னான், ‘காணிக்கைத் தட்டு எங்கே இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை.’

அது உண்மையாக இருந்தது. காணிக்கைகள் எடுக்கப்பட்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டிருந்தன.

‘அப்படியென்றால் திருப்பூட்டறைக்குச் சென்று ஒரு பெரிய பையை எடுத்துக்கொண்டு உன்னால் முடியும் அளவிற்குச் சேகரித்துக்கொள்,’ என்றார் தந்தை.

‘அப்புறம் நான் என்ன சொல்லவேண்டும்?’ என்றான் பையன்.

தந்தை எண்ணப்பூர்வமாக அவனது மொட்டை யடிக்கப்பட்ட, அதன் மேற்புடைப்பான பொருத்து வாய்களுடன் இருந்த நீலமண்டையோட்டை ஆராய்ந்து பார்த்தார்.

இப்போது முழிப்பது யாரென்றால் அது அவர்தான்:

‘அலைந்து திரியும் யூதனைத் துரத்துவதற்கு என்று சொல்,’ என்றார் அவர், அப்புறம் அவர் அதைக் கூறிய போது தனது இதயத்தில் ஒரு பெரும் சுமையைத் தாங்கிக்கொண்டிருந்ததாக உணர்ந்தார்.

ஒரு கணத்திற்கு அந்த நிசப்தமான ஆலயத்தின் மெழுவர்த்திகள் உருகிச்சொட்டும் ஒலியையும் தனது சொந்த உணர்ச்சிவயப்பட்டதும் கடினமானதுமான சுவாசத்தைத் தவிர வேறு எதையும் கேட்கவில்லை.

அப்புறம், திருச்சபை ஏவலன் அவனது உருண்ட விழிகளைத் திகைப்புடன் அவரின் மீது வைத்து நோக்கியபோது, திருச்சபை ஏவலனின் தோளில் தனது கையை வைத்தவாறு, அவர் கூறினார்:

‘பிறகு பணத்தை எடுத்து தொடக்கத்திலிருந்தே தனியாக இருக்கும் அந்தப் பையனிடம் கொடு, நீ அவனிடம் சொல் இது துறவியிடமிருந்து என்றும், அப்புறம் அவன் ஒரு புதிய தொப்பியை கட்டாயம் வாங்கவேண்டும் என்றும்.’

One day after Saturday by Gabriel Garcia Marquez. English translation: J. S. Bernstein. From: Gabriel Garcia Marquez: Collected Stories (Translated from the Spanish by Gregory Rabassa & J.S. Bernstein), Jonathan Cape, 1991.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer