பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
நான்காவது 14 வரிக் கவிதை

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

கருணையுடன் நீங்கள் அவனைத் தங்குவதற்கு வரவேற்றீர்கள்
ஆனால் உங்கள் விருந்தாளியை சந்தோஷப்படுத்த எந்த இடமும் இல்லை
அவன் கிளம்பிச் செல்லுமுன் எதிர்ப்பு தெரிவிக்கத் துணிந்தான்.
அவசரத்தில் அவன் வந்தான் அவசரத்தில் அகன்று போனான்.

அவன் இருப்பதற்கு ஓரிடம் கூட உங்களிடம் இருக்கவில்லையா?
மிக வறிய பிச்சைக்காரர்கள் கூட தம் விருந்தாளிக்கு
கொஞ்சம் ரொட்டியைத் தருகிறார்கள்.
இங்கே ஓர் வீட்டுக்கோ அல்லது படுக்கைக்கோ தேவை ஏதுமில்லை
மரத்தினருகில் ஒரு சிறிய பாதுகாப்பிடம்.

அது இல்லாமல் அவன் வரவு நல்வரவாக அவனால் கருத இயலாது
உணர்ச்சியற்று வரவேற்கப்பட்ட அவன்
போவது சாலச் சிறந்ததென நினைத்தான்.
அவனது இருப்பு நேரடி அவமரியாதையானதாய்த் தோன்றியது.

எனவே அவன் அங்கே இருப்பதற்கான தைரியத்தை இழந்தான்
அவனது விருப்பங்கள் இப்பொழுது அவனுக்கு ஒவ்வாதவையாய்த் தோன்றின.
மேலும் அவன் அவசரம் எல்லாம் சமமாகப் பொருத்தமற்றதாய்.

From Poems of the Crisis Years 1929 - 1933

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer