ரைனர் மரியா ரில்கே
1. புகழ் ஒளியில் புத்தன்

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

மொழியாக்கக் கவிதைகள்

எல்லா மையங்களின் மையமே
உள்ளகங்களின் உள்ளகமே
தன்னைத் தானே மூடுண்ட பாதாம்
இனிமையாய் வளர்ந்தவாறு
இவை யாவும் இந்தப் பிரபஞ்சமனைத்திலும்
மிகச் சேய்மையிலுள்ள நட்சத்திரங்கள் வரையிலும்
அதற்கப்பாலும்
விதையைச் சூழ்ந்த உன் தசை உன் கனி

இப்பொழுது உணர்கிறாய் நீ
எதுவும் உன்னைப் பிடித்துத் தொங்கவில்லை என
உன் உமி முடிவில்லா வெளியில் நீள்கிறது
அங்கே சத்தான அடர்ந்த திரவங்கள்
உயர்ந்து வழிந்தோடுகின்றன
வெளிப்புறத்தில் ஒரு கதகதப்பு உதவுகிறது

உன் எல்லையற்ற அமைதியில் நீ ஒளியூட்டப்பட்டுள்ளாய்
ஒரு பில்லியன் நட்சத்திரங்கள்
இரவின் ஊடாய்ச் சுழன்று செல்கின்றன
உன் தலைக்கு மேல் ஒளி கிளர்ந்தபடி
ஆனால் எல்லா நட்சத்திரங்களும் மரித்தபின்னும்
உனக்குள் இருக்கும் அந்த இருப்பு
இருக்கும்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer