பெர்டோல்ட் ப்ரக்ட் - தேர்ந்தெடுத்த கவிதைகள்
முதலாம் சங்கீதம்

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

1
எவ்வளவு பயமுறுத்துவதாய் இருக்கிறது இரவில் இந்தக் 
கரிய நிலத்தின் நடுமேடான முகம்
2
உலகின் மேற்பகுதியில் மேகங்கள் உள்ளன, அவை உலகிற்கு
சொந்தமானவை.மேகங்களுக்கு மேல் ஒன்றுமில்லை
3
பாறைக்கற்கள் நிறைந்த வயலில் இருக்கும் தனித்த மரம் இதெல்லாம்
பயனற்றது என்று கட்டாயமாய் நினைத்துக்கொண்டிருக்கும்.
வேறு மரங்களே இல்லை.
4
நாம் கவனிக்கப்படவில்லை எனத் தொடர்ந்து நினைக்கிறேன்.
இந்த இரவின் ஒரேயொரு நட்சத்திரத்தின் தொழுநோய்.
5
வஸ்துக்களை இணைக்க இன்னுமே கூட முயன்றுகொண்டிருக்கும் 
கதகப்பான அந்த கத்தோலிக்கத் தனமான காற்று.
6
நான் மிகவும் தனிமைப்பட்டுப்போனவன். பொறுமையே கிடையாது 
எனக்கு. நம் ஏழைச் சகோதரர் காட்ரெவார்டியு உலகைப் 
பற்றிக் கூறினார்: அதைக் கணக்கில் சேர்க்கவேண்டாம்.
7
நாம் பால்வெளிமண்டலத்தில் உள்ள ஒரு நட்சத்திரத்தை நோக்கி
உயர் வேகத்தில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். உலகின்
முகத்தில் ஒரு மஹா அமைதியிருக்கிறது. என் இதயம் வேகமாய்த் 
துடிக்கிறது. மற்றபடி எல்லாம் சரியாக இருக்கிறது.

From Thirteen Psalms

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
மணல்வீடு இலக்கிய வட்டம
ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல்
மேட்டூர் வட்டம்,
சேலம் மாவட்டம் - 636 453
தொலைபேசி : 98946 05371
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer