வினையன் கவிதை


பகிரு

நெளுவு

ஊருக்கென்றால் ஒக்க நிற்குமுனக்கு
படுக்கை மட்டுமென்னோ டெதற்கு
மோட்டுவளையை யடைக்க
பிடிக்கண்ணாம்புச் செத்தைக்கு வழியில்லை
மோடி வைத்துக்கொண்டுதான்
என்னவாகப் போகிறது
கொடுத்தவிடத்தில்
கேட்டு வாங்க கேடென்ன
சொர சொரவென்றா கொட்டுகிறது
ஆற்றில் வருகிறது
மணலில் சொருவுகிறது
கூப்பனுமில்லை யென்றால்
குண்டி காய்ந்திருக்கும்
இவ்வையகத்திலுண்டா
எனக்கு வந்த வாழ்வு
கொல்ல நெளுவுக் கண்டு
கொரங்குப் பூலை பூலை ஆட்டுமாம்.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer