ரைனர் மரியா ரில்கே
13.சிறுத்தை

தமிழில்: பிரம்மராஜன்

பகிரு

மொழியாக்கக் கவிதைகள்

கம்பிகளைப் பார்த்துப் பார்த்து அதன் கண்கள்
அத்தனை களைப்புற்றதால்
இனி அது எதையும் காண்பதேயில்லை
கம்பிகள்தான் அதன் உலகம்
ஒரு நூறு ஆயிரம் கம்பிகள் இருப்பது போல் தோன்றுகின்றன
கம்பிகளின் பின்னால் எந்த உலகும் இல்லை

லயமிகு எளிய நடையின் லகுவான அசைந்தாட்டம்
சின்னஞ்சிறிய மையம் வரை அது சுழன்றடைகிறது
ஒரு புள்ளியைச் சுற்றிலுமான
சக்தியின் நடனத்தை அது நிகர்த்திருக்கிறது

அதில் ஓர் மகத்தான மனத்திட்பம் திகைப்புற்று நிற்கிறது
எப்போதாவது அதன் கருவியின் திரைகள் ஓசையின்றி உயர்கின்றன
. . .பிறகு ஒரு காட்சி உள்ளே நுழைகிறது
தோள்களின் இறுகிய நிசப்தத்தினூடாய் நழுவி
இதயத்தை அடைந்து பின் இல்லாது போகிறது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer