பரேஷ் மைத்தி


பகிரு

பரேஷ் மைத்தி, சமகால இந்தியாவில், தனது துடிப்பான ஓவியங்களின் ஊடாக அறியப்படுபவர். தொடர்ந்து ஓவியக் கலையில் புதிய பரிமாணங்கள் முன்னெடுப்பவர்
களில் ஆகச்சிறந்த சீரிய படைப்பாளிகளில் ஒருவராக அறியப்படுபவர்.

இவரது தொடக்ககால ஓவியங்கள் நீர் வண்ணச் சாயத்தில் வரையப்பட்டவை. அவற்றில் விரிந்த நிலப்பரப்புகள், JMW டர்னர், வின்ஸ்லோ ஹோமர் ஆகியோரின் உணர்வு பதிவிய படைப்புகளை நினைவுக்கூருவதாய் அமைந்திருந்தன.

Paresh Maity

இவரது உருவக படைப்போவியங்கள், ரெம்ப்ராண்ட், பிகாஸோ மற்றும் இந்திய கவிஞரும், ஓவியருமான, ரபீந்திரநாத் தாகூர் ஆகியோரின் தாக்கத்தால் உருவானவையாகும். இன்றைய தேதியில் இவரது பிரபலமான படைப்பு, இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் எண்ணூறு அடி நீளத்தில் அமைந்த, உலகின் நீண்ட சுவரோவியங்களில் ஒன்றான இந்திய ஒடிசி (Indian Odyssey 2010) ஆகும்.

இந்த சுவரோவியம், இந்தியாவின் பல்வகை கலாச்சாரங்களை, அடையாளங்களை, உயிர்ப்பான ஓவிய, சிற்ப, கட்டிட சாத்திரங்களை மேலும் இந்திய குடிகளை ஒரு நீண்ட திரைசீலையில் உருவகிக்கிறது.

இவரது ஓவியங்கள் உலகெங்கிலும் உள்ள அருங்காட்சியகங்களில், குறிப்பாக பிரிட்டிஷ் மியூசியம், ரூபின் மியூசியம் மற்றும் புது தில்லியில் உள்ள நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட் (National Gallery of Modern Art), என காணக் கிடைக்கின்றன. இவரது படைப்புக்களை அங்கீகரித்து, இந்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2022 Designed By Digital Voicer