அரூபச் சித்தன் நாட்குறிப்பு

நந்தாகுமாரன்

பகிரு

தள்ளியும் போகாத பொழுதில்
காலத்தின் முதுகில்
சாய்ந்து கிடக்கிறான்
அரூபச் சித்தன்
சுகமாக இருப்பதால்
சும்மா இருக்கிறது
காலமும்
நாட்குறிப்பை நிரப்புவதற்காகவாவது
ஏதாவது செய்யமுடியுமா எனக் கேட்கிறான்
காலத்தின் காதுகளை வருடியபடி
அப்பொழுது
ஒரு மெல்லிசையைப்போல் கேட்கிறது
அவன் உயிரின் அமைதி
ஒரு பெருமழையைப்போல் பொழிகிறது
காலத்தின் சொர்க்கவாசல் தரிசனம்
உமையாள் தோன்றும் நீலவண்ணக் கவிதையில்
அகால முடிவிலியின் வெளி தீட்டப்படுகிறது
ஒரு ஓவியமாக.

வெளியிடப்பட்டது

manalveedu_logo-new
களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம் வெளியீடு
ஏர்வாடி, சேலம்
[email protected]
Copyright © 2020 Designed By Digital Voicer